கிளிநொச்சி அருகே TN மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

கிளிநொச்சி அருகே மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை....

Last Updated : Jan 13, 2019, 11:36 AM IST
கிளிநொச்சி அருகே TN மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது title=

கிளிநொச்சி அருகே மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை....

கிளிநொச்சி கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 11 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

கைது செய்யப்பட்ட மீனவர்களிடன் இருந்து படகு இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆழ்கடலில் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டு அங்கு விசாரணைகள் மற்றும் பரிசோதனைகள் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்யப்பட்ட அவர்களிடம் இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே புதுக்கோட்டையைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News