மோடி இருந்தால் நான் போக மாட்டேன்! ஒரு மாற்றம் வேண்டும் - சுப்பிரமணிய சுவாமி!

பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க கூப்பிட்டால் வருவேன் கூப்பிட வில்லை என்றால் வரமாட்டேன்; தமிழ்நாடு என் சொந்த ஊர் மதுரை விமான நிலையத்தில் சுப்பிரமணிய சுவாமி பேட்டி.  

Written by - RK Spark | Last Updated : Mar 24, 2024, 07:38 AM IST
  • பாஜக கூப்பிட்டால் வாக்கு சேகரிப்பேன்.
  • இல்லை என்றால் வர மாட்டேன்.
  • மதுரையில் சுப்பிரமணிய சுவாமி பேட்டி.
மோடி இருந்தால் நான் போக மாட்டேன்! ஒரு மாற்றம் வேண்டும் - சுப்பிரமணிய சுவாமி! title=

மும்பையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த முறை நான் போட்டியிடவில்லை நான் ஆறு முறை வெற்றி பெற்று இருக்கிறேன் எனக்கு அவசியம் இருந்தால் ராஜ்யசபா வாங்கிக் கொள்வேன் எனக்கு அந்த அந்தஸ்து உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுகவும் திமுகவும் பாஜக வளரவில்லை நோட்டாவிற்கு கீழ் வாக்குகள் வாங்குவார்கள் என தெரிவித்துள்ளனர் என்ற கேள்விக்கு? அவருடைய பேச்சை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தார். அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்., கட்டாயமாக பிஜேபி வளர்ச்சி அடைந்துள்ளது. பிஜேபி வெற்றி பெற்றால் வடநாட்டு தலைவரை காக்கா பிடிக்க கூடாது. 

மேலும் படிக்க | தமிழகத்திற்கு மோடி 100 முறை வந்தாலும் பாஜக மண்ணை தான் கவ்வும் - திமுக

காக்கா பிடிப்பது தெரியவும் கூடாது அப்போதுதான் பிஜேபி மேலே வரும். இல்லாவிட்டால் டெல்லி என்ன சொல்கிறதோ அதுதான் நடக்கப் போகிறது. நேற்று வரை தனியா நிற்போம் அதுக்கப்புறம் போய் இவரிடம் பேசுகிறோம் அவரிடம் பேசுகிறேன் என்று சொல்லக்கூடாது. அடுத்த கேபினட்டில் நீங்கள் இடம் பெறுவீர்களா என்ற கேள்விக்கு? மோடி இருந்தால் நான் போக மாட்டேன்., இப்பவே நான் சொல்கிறேன்., பிரதமர் மாற்றம் குறித்து கேட்டதற்கு அது தெரியாது சார் இப்ப எப்படி பதில் சொல்ல முடியும்? அவர் இரண்டு முறை பிரதமராக இருந்திருக்கிறார். வேறு யாராவது வரவேண்டும். கோயம்புத்தூர் தொகுதியில் பிரதமர் மோடியின் ஆணைக்கிணை எங்க போட்டியிடுகிறேன் என அண்ணாமலை கூறி இது குறித்த கேள்விக்கு? அதைப் பற்றி நான் என்ன சொல்ல வேண்டும் என்றார்.

இந்தியா முழுவதும் பாஜக எத்தனை இடங்களில் வெல்லும் என்ற கேள்விக்கு? அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மெஜாரிட்டியை நிரூபிக்கும். 273 இருந்தால் போதுமானது தான் ஆனால் 250க்கு மேல் வெற்றி பெற்றால் எனக்கு திருப்தி என்றார். பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த கேள்விக்கு? இந்தியாவில் இந்து மக்களை பிராமணன், சத்ரியன், சூத்திரன் என பிரித்து வைத்திருக்கிறார்கள். அனைவருமே இந்துக்கள் என்பதை ஒற்றுக்கொள்ள வேண்டும். வித்தியாசம் இல்லை.? நம்மளுடைய ரத்தத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லா இந்தியர்களின் ரத்தமும் ஒன்றுதான். அந்த உணர்வு வரவேண்டும். 

இந்தியாவின் ஜிடிபி உயர்ந்துள்ளது என நிதி அமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு? இந்தியாவின் பொருளாதாரம் பற்றி கேட்டதற்கு.? ஐயோ நிர்மலா சீதாராமனா.? வேண்டாம் வேண்டாம் என்றார். உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை என்ற செய்தியாளர் கேள்விக்கு..? எனக்கு தெரியும்.! எனக்கு தெரியும்.? இந்தியாவின் GDP-ல் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இந்தியாவின் ஜிடிபி உயர்ந்துள்ளது என அவர்கள் வேண்டுமானால் சொல்லட்டும். பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் கேளுங்கள்.? பொருளாதாரம் பற்றி பேசுவதற்கு எனக்கு இஷ்டம் இல்லை. ஆனால்., நாட்டில் ஒற்றுமையை உண்டாக்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுக மக்களை பிரித்தாளுகின்றனர். மக்களை பிளவுபடுத்த வெள்ளைக்காரன் கற்றுக் கொடுத்ததை திமுக பேசுகிறது. நம்மளுடைய வரலாற்று புத்தகத்தில் என்ன இருக்கிறதோ மக்கள் அதை கற்றுக் கொள்ள வேண்டும். 

முதல்வரின் கைதுக்கு பாஜகவின் சூழ்ச்சிதான் காரணம் என எதிர்க்கட்சி கூறுவது குறித்த கேள்விக்கு? எதிர்க்கட்சி அப்படித்தான் சொல்வார் நீதிமன்றத்தில் வாதம் செய்து நீதியை பெற்றுக் கொள்ளட்டும் என்னை கூட சோனியா காந்தி ஆட்சி காலத்தில் சிதம்பரம் என்ற மக்கு அவரை மக்கு தான் என்று சொல்ல வேண்டும் மக்குத்தனமாக என் மீது நான்கு வழக்குகள் போட்டார் அது அனைத்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது நாம் என்ன தவறு செய்தோம் செய்யவில்லை என்பதை நீதிமன்றத்தில் சென்று வெல்ல வேண்டும் என்றார். பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வருவீர்களா என்ற கேள்விக்கு? கூப்பிட்டா வருவேன் கூப்பிடவில்லை என்றால் வரமாட்டேன் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு எப்போ வேண்டுமானாலும் வருவேன் ஏனென்றால் இது என்னுடைய சொந்த ஊர். பிரச்சாரத்திற்கு நான் வருவதற்கு அவர்கள் தான் முடிவு பண்ண வேண்டும் நான் வந்து கேட்க மாட்டேன் எனைய அழையுங்கள் நான் வந்து பிரச்சாரம் செய்கிறேன் என்று நான் ஒருபோதும் கேட்க மாட்டேன் என்றார்.

மேலும் படிக்க | பாமக வேட்பாளர்களில் 30% மகளிர்; 20% பட்டியலினம்... இது தான் சமூகநீதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News