மீண்டும் களத்தில் பொன். மாணிக்கவேல்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

சிலை கடத்தல் வழக்குகளை பொன். மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Last Updated : Apr 12, 2019, 01:56 PM IST
மீண்டும் களத்தில் பொன். மாணிக்கவேல்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு title=

சிலை கடத்தல் வழக்குகளை பொன். மாணிக்கவேல் விசாரிக்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

ஓய்வு பெற்ற அதிகாரியான பொன். மாணிக்கவேலை, சிறப்பு அதிகாரியாக நியமித்து சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தனர். இந்த தீர்ப்பில் சிலைகடத்தல் வழக்கை சிபிஐக்கு மற்ற கோரிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம். அதே நேரத்தில் வழக்கை விசாரிக்கும் அதிகாரியான பொன்.மாணிக்கவேல் கைது நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் சிலைக் கடத்தல் வழக்கை, சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவையும், அரசாணையையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. 

Trending News