மீண்டும் அதிமுக ஆட்சி? மெகா கருத்துக்கணிப்பை நடத்திய தன்னார்வ அமைப்புகள்!!

வரவிருக்கிற 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் பிரமாண்ட கருத்துக்கணிப்பு நடத்திய தன்னார்வ அமைப்புகள்.  மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் என 50.2 சதவீதம் பேர் ஆதரவு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 26, 2020, 05:43 PM IST
மீண்டும் அதிமுக ஆட்சி? மெகா கருத்துக்கணிப்பை நடத்திய தன்னார்வ அமைப்புகள்!!  title=

Survey on 2021 Tamil Nadu Assembly election: தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இன்னும் கட்டுக்குள் வராத சூழலில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் எப்படி நடத்தும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்து வரும் நேரத்தில், 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் யார் ஆட்சி ஆட்சியமைக்க போகிறார்கள் என்று சில தன்னார்வ அமைப்புகள் கருத்துக்கணிப்புகளை நடத்தி வருகின்றனர்.மறுபுறத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என அதிமுகவும் (AIADMK), இரண்டு முறை தோல்வியை தழுவிய திமுக (DMK), இந்த முறை கண்டிப்பாக ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என வியூகங்கள் வகுத்து வருகின்றது. அதேபோல மற்ற கட்சிகள் யாருக்கு ஆதரவு அளிப்பது, யாருடன் கூட்டணி சேர்வது என ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த சூழ்நிலையில் மண் ஃபவுண்டேசன் (Mann Foundation) மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் இணைந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திய கருத்துக்கணிப்பு என்ற சொல்கிறது என்று பார்ப்போம். 

மண் ஃபவுண்டேசன் மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் இணைந்து 38 மாவட்டங்களிலும் 234 தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 3000 என்ற எண்ணிக்கையில் பொதுமக்கள், தொழிலாளிகள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோரிடம் மொத்தம் 7 லட்சத்து 2 ஆயிரம் கருத்துக்கணிப்பு மாதிரிகள் சேகரித்துள்ளன. இந்த கருத்துக்கணிப்பில் மொத்தம் 10 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பதில்கள் பெறப்பட்டன. 

கருத்துக்கணிப்பு விவரம்!! 

வருகிற சட்டமன்ற தேர்தலில் (Tamil Nadu Assembly election 2021) வெற்றிவாய்ப்பு யாருக்கு என்ற கேள்விக்கு அதிமுக-50.2, திமுக-35.6, பிறகட்சிகள்-14.2 என்ற சதவீத அளவில் வாக்குகளை பதிவு செய்திருந்தனர். 

தமிழக முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு ஓபிஎஸ்-28.7, இபிஎஸ்-27.9, மு.க.ஸ்டாலின்-26.6, ரஜினி-6.9, அன்புமணி-6.2, கமல்-3.7 சதவீதம் என்ற அளவில் வாக்களித்திருந்தனர்.

ALSO READ |  தேர்தலுக்காக திமுக கையில் எடுக்கும் இந்தி எதிர்ப்பு உத்தி... கை கொடுக்குமா... காலை வாருமா...!!!

அதிமுக பலம் மற்றும் பலவீனம்:
அதிமுகவின் பலம் என்ற கேள்விக்கு இரட்டை இலை சின்னம்-76.5, ஜெயலலிதாவின் (Jayalalithaa) செல்வாக்கு-23.5 சதவீதம் எனவும், அதிமுகவின் பலவீனம் என்ற கேள்விக்கு இரட்டைத்தலைமை-65.4, ஆளுமையற்ற நிலைமை-34.6 சதவீதம் எனவும் பதிலளித்திருந்தனர்.

தற்போதைய அதிமுக (ADMK) தலைவர்களில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் யார்? என்ற கேள்விக்கு ஓபிஎஸ்-74.7, இபிஎஸ்-25.3 சதவீதம் எனவும், 

அதிமுகவில் இந்த மாற்றத்தை செய்தால் கட்சி பலப்படும் என்றால் அந்த மாற்றம் எது? என்ற கேள்விக்கு ஒற்றைத்தலைமை-75.4, சசிகலா தலைமை-19.3, சசிகலா-டிடிவி இணைப்பு- 5.3 சதவீதம் எனவும் பதிவு செய்தனர். 

அதிமுகவின் ஆட்சி நிலவரம் குறித்த கேள்விக்கு நன்று என 21.7 சதவீதம் பேரும், பரவாயில்லை என 49.4 சதவீதம் பேரும், மோசம் என 28.9 சதவீதம் பேரும் வாக்களித்தனர். 

ALSO READ |  இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளோம், பின்வாங்க மாட்டோம்: EPS

திமுக பலம் மற்றும் பலவீனம்:
திமுகவின் பலம், பலவீனம் என்ற கேள்விக்கு பலம் என்ற பகுதியில் உதயசூரியன் சின்னத்துக்கு 78.6 சதவீதம் பேரும், கட்சியின் கட்டுக் கோப்புதான் காரணம் என 21.4 சதவீதம் பேரும், பலவீனம் என்ற பகுதியில் கருணாநிதி இல்லாதே காரணம் என 66.2 சதவீதம் பேரும், தலைமை சரியில்லை என 33.8 சதவீதம் பேரும் வாக்களித்தனர். 

திமுகவின் தலைமை மற்றும் மு.க.ஸ்டாலின் (MK Stalin) பற்றிய கேள்விக்கு முதல்வராக தகுதியானவர் என 41.6 சதவீதம் பேரும், அவரிடம் கருணாநிதியின் ஆளுமை அறவே இல்லை என 42.8 சதவீதம் பேரும், கட்சி பலமிழக்கிறது என 13.4 சதவீதம் பேரும் வாக்குகளை பதிவு செய்தனர்.

கோரிக்கை திட்டங்களை நிறைவேற்றினால் ஆளும்கட்சிக்கு வெற்றி சாத்தியமா? என்ற கேள்விக்கு சாத்தியம் என 47.3 சதவீதம் பேரும், சாத்தியமில்லை என 25.8 சதவீதம் பேரும், கணிக்க முடியாது என 26.9 சதவீதம் பேரும் வாக்களித்தனர். 

ALSO READ |  Donald Trump, EPS…. கட்சி, நாடு, கண்டம் என்ற பாகுபாடின்றி விரிந்து பரந்திருக்கும் திமுக-வின் உறுப்பினர் பட்டியல்!!

ரஜினி, கமல் அரசியல் பிரவேசம்:
ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு மாற்றம் நிச்சயம் வரும் என 13.1 சதவீதமும், மாற்றத்திற்கு வாய்ப்பில்லை என 59.5 சதவீதமும், வருகையே தேவையற்றது என 27.4 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. 

இந்த கருத்துக்கணிப்பு குறித்து மண் அறக்கட்டளையின் தன்னார்வலர் பி.செல்லதுரை கூறுகையில், "இந்த கருத்துக்கணிப்பானது நடுநிலையோடு தமிழக அளவில் மக்களின் மனநிலையை அறிந்துகொள்வதற்காக தன்னார்வலர்களை இணைத்து பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு 3 ஆயிரம் மாதிரிகள் வீதம் மாதிரிகள் எடுப்பது என்பது இதுவே முதல்முறை. இதன் மூலம் மக்களின் தெளிவான மனநிலைமையை வெளிக்கொணர வேண்டும் என்பதே எங்களது நோக்கம். 

மேலும் பேசிய அவர், "தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை 50.2 சதவீதம் பேர் வலியுறுத்தி உள்ளனர். தேர்தல் நெருங்கும் வேளையில் அடுத்த கட்ட கருத்துக்கணிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார். 

Trending News