சட்ட நீதியும், சமூக நீதியும் கிடைத்திட நீதித்துறை வழிவகை செய்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சட்ட நீதியும், சமூக நீதியும் கிடைத்திட நீதித்துறை அமைப்புகள் வழிவகைசெய்திட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 25, 2023, 03:47 PM IST
  • தமிழ்நாடு அரசு சார்பில் இதுவரை நீதித்துறை சார்ந்த பணிகளுக்கு 106 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது: தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்: தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்
  • உச்ச நீதிமன்ற கிளைகளை சென்னையில் அமைக்க வேண்டும்: தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்
சட்ட நீதியும், சமூக நீதியும் கிடைத்திட நீதித்துறை வழிவகை செய்திட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் title=

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற துவக்க விழா மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெறுகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிமன்றத்தை காணொளி காட்சிகள் மூலம் திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன், மதுரை மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி வடமலை கலந்து கொண்டனர். மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதிகள் ஆர்.மகாதேவன்,  சுரேஷ் குமார் உள்ளிட்ட நீதிபதிகள் பங்கேற்றனர்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,  மூர்த்தி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் கலோன்  ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க | முதல் முறையாக அரசு தரப்பில் இன்புளுயன்ஸா தடுப்பூசி- அமைச்சர் மா சுப்பிரமணியன்

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், ‘சட்ட நீதியும், சமூக நீதியும் கிடைத்திட நீதித்துறை அமைப்புகள் வழிவகை செய்திட வேண்டும்’ என்று கூறினார். 

அவர் மேலும் பேசுகையில், ‘106 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு இதுவரை நீதித்துறை சார்ந்த பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 44 புதிய நீதிமன்றம் அமைக்க ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன. நீதித்துறை கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாடு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தில் சமூக நீதியுடன் நீதிபதி நியமம் செய்ய வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற கிளைகளை சென்னையில் அமைக்க வேண்டும் என மூன்று கோரிக்கைகளை மத்திய அமைச்சகத்திற்கு இந்த கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்’என்றார்.

மேலும் படிக்க | கோவைக்கு அதிமுக தான் நல்ல திட்டங்களை கொண்டு வந்தது - எஸ்பி வேலுமணி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News