அரசு பேருந்தை ஓட்டிய தமிழக அமைச்சர்!

கள்ளக்குறிச்சியில் புதிய வழித்தடங்களில் பேருந்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 4, 2021, 02:49 PM IST
அரசு பேருந்தை ஓட்டிய தமிழக அமைச்சர்! title=

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை வழியாக திருச்சிக்கும்,திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை வழியாக கள்ளக்குறிச்சிக்கும் என இரண்டு புதிய வழித்தட பேருந்துகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

ALSO READ ’அம்மா வழியில் அதிமுக’ EPS, OPS போட்டியின்றி தேர்வு?

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு "கிராமங்களை எல்லாம் நகரங்களாக மாற்ற வேண்டும் என்பதே" தமிழக முதல்வரின் கனவாகும்.நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற சிறப்பு திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர் சிறப்புரையாற்றினார்.

evvelu

இரண்டு புதிய வழித்தட பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்து தொடர்ந்து பேருந்தில் ஏறி சிறிது தூரத்திற்கு பேருந்தை இயக்கி பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களை உற்சாக படுத்தினார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் மற்றும் போக்குவரத்துதுறை  அரசு அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.

bus

ALSO READ தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News