வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 1300000 விண்ணப்பம்!

வாக்காளர் பட்டியலில் புதிதாத பெயர் சேர்க்க தமிழகம் முழுவதிலும் இருந்து 13,73,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரசா சாஹூ தெரிவித்துள்ளார்!

Last Updated : Nov 7, 2018, 08:14 PM IST
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 1300000 விண்ணப்பம்! title=

வாக்காளர் பட்டியலில் புதிதாத பெயர் சேர்க்க தமிழகம் முழுவதிலும் இருந்து 13,73,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரசா சாஹூ தெரிவித்துள்ளார்!

தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 1-ஆம் நாள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வாக்காளர் பெயர் பட்டியலின் படி தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர். 

வாக்காளர் பட்டியலில் வாங்களார் தங்களது பெயர் விவரங்கள் சரியாக உள்ளது என திருத்திக்கொள்ள சிறப்பு முகாம்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 9-ஆம் நாள் முதல் அக்டோபர் 31-ஆம் நாள் வரை வாக்காளர் சரிபார்ப்பு பணி நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களில் வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இந்த சிறப்பு முகாம்களில் புதிதாக பெயர் சேர்க்க 13,73,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகப்படிதயாக சென்னையில் 99,458 பேரும், குறைந்தபட்சமாக நீலகிரியில் 8,696 பேரும் விண்ணப்பித்துள்ளனர். பெயரை நீக்கம், திருத்தம் மேற்கொள்ள 20,07,412 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த குறிப்பிட்ட நாட்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசிலினை செய்து இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்தாண்டு ஜனவரி 4-ஆம் நாளுக்குள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது!

Trending News