தொடர்ந்து 6-வது நாளாக 700-க்கு மேல் COVID-19 தொற்றுகளை பதிவு செய்த தமிழகம்...

COVID-19 காரணமாக தமிழ்நாடு திங்களன்று ஏழு இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 118-ஆக உயர்ந்துள்ளது.

Last Updated : May 25, 2020, 07:51 PM IST
தொடர்ந்து 6-வது நாளாக 700-க்கு மேல் COVID-19 தொற்றுகளை பதிவு செய்த தமிழகம்... title=

COVID-19 காரணமாக தமிழ்நாடு திங்களன்று ஏழு இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 118-ஆக உயர்ந்துள்ளது.

திங்களன்று 805 புதிய வழக்குகள் மாநிலத்தின் மொத்த தொற்றுநோய்கள் எண்ணிக்கையினை 17,082-ஆக உயர்த்தியது என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இன்றைய எண்ணிக்கையில் சென்னை மிகவும் அதிகமான தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இன்று பதிவான தொற்றுகளில் சென்னையில் மட்டும் 549 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆக அதன் மொத்த தொற்றுகள் எண்ணிக்கை 11,000-ஐத் தாண்டியது, மாநிலத்தின் மொத்த தொற்று எண்ணிக்கை 17,082-ஆக அதிகரித்துள்ளது.

93 புதிய வழக்குகள் வெளிநாடு உட்பட பல்வேறு இடங்களிலிருந்து மாநிலத்திற்கு திரும்பிய நபர்கள் என்று சுகாதாரத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

அதேவேளையில் ஒட்டுமொத்த மீட்டெடுப்புகள் 8,731-ஆக உயர்ந்துள்ளனது. திங்களன்று மட்டும் மொத்தம் 407 பேர் வெளியேற்றப்பட்டனர் என அரசு தகவல் தெரிவிக்கிறது.

இன்று 700 வழக்குகளை தமிழகம் கண்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக ஆறு நாட்களுக்கு தமிழகம் 700-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது. மேலும் செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 8,230 ஆக உள்ளது என தமிழக அரசு அறிவிப்பு குறிப்பிடுகிறது.

Trending News