தகாத உறவு வைத்திருந்த தந்தை - ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொன்ற மகன்!

கோவையில் தகாத உறவு வைத்துக்கொண்டு தந்தை பணம் தர மறுத்ததால் தந்தையை மகன் கழுத்து அறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 23, 2022, 04:20 PM IST
  • வேறு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த தந்தை
  • ஆத்திரத்தில் தந்தையை கொலை செய்த மகன்
  • தலைமறைவாக உள்ள மகனுக்கு போலீஸார் வலைவீச்சு
தகாத உறவு வைத்திருந்த தந்தை - ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொன்ற மகன்! title=

கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன் குளம் ஹவுசிங் யூனிட்டில் வசித்துவந்த கருப்பசாமி (61). தூய்மை பணியாளராக பணிபுரிந்து ஓய்வில் உள்ளார். இவருக்கு சுரேஷ் என்ற மகனும் மற்றொரு மகளும் உள்ளனர்.
 
கடந்த சில வருடங்களுக்கு முன்பு புலியகுளம் பகுதியில் கணவரைப் பிரிந்து வசித்து வந்த விமலா (51) என்ற பெண்ணுடன் கருப்பசாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது கருப்புசாமி மனைவி வசந்தாவுக்கு தெரிய வரவே கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனையடுத்து அவர் தனது கணவரைப் பிரிந்து மகனுடன் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்ற கருப்பசாமி அப்போது கிடைத்த ஓய்வூதிய பணத்தை காதலி விமலாவிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | கள்ளக்காதலுக்கு இடையூறு - கணவனை கொன்று உடலை கிணற்றில் வீசிய மனைவி!

இது குறித்து அவரது மகன் சுரேஷ் தனது தந்தையை அடிக்கடி நேரில் சந்தித்து தான் கஷ்டப்படுவதால் ஓய்வூதிய பணத்தை தனக்கு கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் கருப்பசாமி பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் தந்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனிடையே நேற்று வீட்டுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடைக்கு சென்ற கருப்பசாமி நன்றாக மது அருந்திவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் கள்ளக்காதலி வீட்டிற்கு சென்றுள்ளார். 

போதையில் கருப்பசாமி நிதானம் இழந்து காணப்பட்டதால் விமலா கதவை திறக்காமல் வீட்டுக்குள் படுத்து தூங்கியுள்ளார். அப்போது தந்தையிடம் பணம் கேட்பதற்காக வந்த சுரேஷ் போதையில் தள்ளாடியபடி இருந்த கருப்பசாமியை அப்பகுதியில் இருந்த கோவில் ஒன்றின் அருகே அழைத்து சென்றுள்ளார். 

அங்கு வைத்து பணம் கொடுக்கும்படி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து தனது தந்தையின் கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறிய கருப்பசாமி மகனிடம் தப்பிப்பிபதற்காக 10 மீட்டர் தூரம் ஓடி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளார். தனது தந்தை இறந்ததும் சுரேஷ் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

 
கருப்பசாமி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் இது குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பப இடத்திற்கு விரைந்த போலீசார் கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுரேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | ஆட்டோ டிரைவருடன் கள்ளக்காதல்: 47 லட்சத்துடன் காணாமல் போன கோடீஸ்வரரின் மனைவி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News