‘எனக்கு 105..அவளுக்கு 98’ நான்கு தலைமுறையினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ‘பலே’ பாட்டிகள்..!

திருமங்கலம் அருகே நான்கு தலைமுறைகள் கண்ட 98 வயது மூதாட்டி தனது 105 வயது சகோதரியுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்.   

Written by - Yuvashree | Last Updated : Jun 7, 2023, 05:12 PM IST
  • திருமங்கலம் அருகே 98 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்.
  • அவரது சகோதரிக்கு 105 வயது.
  • 4 தலைமுறையினருடன் சேர்ந்து கொண்டாடியுள்ளனர்.
‘எனக்கு 105..அவளுக்கு 98’ நான்கு தலைமுறையினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ‘பலே’ பாட்டிகள்..! title=

“8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் மாரடைப்பால் உயிரிழப்பு…விளையாடிக்கொண்டிருந்த போதே சிறுமி மயக்கம் போட்டு விழுந்து உயிரிழப்பு..” போன்ற தலைப்பு செய்திகளை, நாம் சமீப காலங்களாக சமீப காலங்களில் அதிகமாக படித்து வருகிறோம். இதற்கு காரணம் என்ன என்று கண்டுபிடிக்க இயலாமல் பல மருத்துவ நிபுணர்கள் திணறி வருகின்றனர். ஆனால், இங்கு சில பாட்டிகள் அசா்டாக வயதில் சென்சுரி அடித்து கொண்டிருக்கின்றனர். அந்த பாட்டிகள் குறித்த செய்தியை, இங்கு பார்க்கலாம் வாங்க. 

திருமங்கலம் அருகே 98 வயது மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடிய பேரன் பேத்திகள் இவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடும் மூதாட்டியின் 105 வயது சகோதரியும்  உடன் இருந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது கிராமத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

98 வயது பாட்டிக்கு பிறந்தநாள்..

மதுரை திருமங்கலம் அருகே கூடகோவில் கிராமத்தை சேர்ந்த ராசு - வேலாயி தம்பதியினர் இவர்களுக்கு 6 மகன்களும் 3 மகள்களும் என ஒன்பது பிள்ளைகள். 93 வயதில் ராசு இயற்கை எய்தினார். இந்நிலையில் பிள்ளைகளுடன் வசித்து வரும் வேலாயிக்கு வயது 98 ஆகிறது. 

98 வயதான வேலாயி அம்மாளுக்கு அவரது பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகள் பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடு செய்து கூட கோவிலில் உள்ள வேலாயி இல்லத்தில் பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை தடபுலராக செய்திருந்தனர் . வேலாயி அம்மாள் தனது மகன், மகன் வழிப்பேரன் ,பேரனின் மகன் ஆகியோர் ஏற்பாட்டின் படி நான்கு தலைமுறைகள் கண்ட பாட்டி வேலாயி தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். 
 
மேலும் படிக்க | அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுகவை வெல்ல முடியாது - ஓ.பன்னீர்செல்வம்!

105 வயது சகோதரி..

வேலாயி அம்மாளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நான்கு தலைமுறை பிள்ளைகள் உடனிருந்து வாழ்த்து பெற்றனர். இத்துடன், கூடுதல் சிறப்பாக  வேலாயியுடன் அவரது சகோதரி கருப்பாயி அம்மாளும் பங்கேற்றார். இந்த கூடுதல் சிறப்பிற்கு காரணம், வேலாயியின் சகோதரி கருப்பாயிக்கு 105 வயது ஆவதுதான். 98 வயது மூதாட்டி பிறந்தநாள் விழாவில் 105 வயதான அவரது சகோதரியும் பங்கேற்று மகன்கள் பேரன் பேத்திகள் என அனைவரையும் வாழ்த்தியது கூடக்கோவில் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதிக ஆயுளுடன் வாழ என்ன காரணம்? 

ஒரு மனிதனின் சராசரி ஆயுள், 68 வயது முதல் 70 வயதாக இருக்கலாம் என சில மருத்துவ நிபுணர்களும் விஞ்ஞானிகளும் தெரிவிக்கின்றனர். ஆனால், அதையும் தாண்டி வாழ்பவர்கள் ஆரோக்கியமான வாழ்வு முறையை கடைப்பிடிப்பவர்களாகவும், நல்ல எண்ணங்களை மட்டுமே சிந்தித்து மன அழுத்தம் இல்லாமல் இருப்பவர்களாகவும் உள்ளார்கள் என சில ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவை சேர்ந்த மரியா பார்னேஸ் மொரியா என்ற பெண்மணிதான் இன்று உலகிலேயே அதிக வயதுடைய பெண்மனியாக உள்ளார். இவரது வயது, 116. இவர் 1907ஆம் ஆண்டு பிறந்துள்ளார். 

மேலும் படிக்க | நெல்லையில் வாலிபர் வெட்டிப் படுகொலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News