ஓ.பி.எஸ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் துவங்கியது

Last Updated : Jan 4, 2017, 10:22 AM IST
ஓ.பி.எஸ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் துவங்கியது title=

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தலைமை செயலகத்தில் துவங்கியது.

 

 

தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்ற பின்னர் கடந்த மாதம் 10-ம் தேதி முதல் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. 

இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக அமைச்சரவைக் கூட்டம் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில், வறட்சி, விவசாயிகளின் தொடர் மரணம், மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 2017 -18 ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு பின்னர் தலைமைச் செயலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை முதல்வர் பன்னீர் செல்வம் வழங்குகிறார். மேலும், பொங்கலுக்கு அறிவிக்கப்பட்ட இலவச அரிசி, வேஷ்டி சேலை திட்டத்தையும் துவக்கி வைக்கிறார்.

Trending News