முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்

அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் சட்டசபைக் குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 

Last Updated : Feb 5, 2017, 03:45 PM IST
முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார்  title=

சென்னை: அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் சட்டசபைக் குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து சசிகலா விரையில் முதல்வராக பதவியேற்கவுள்ளார். நாளை அல்லது 9-ம் தேதி சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

Trending News