ஊரடங்கில் மேலும் தளர்வுகள்; முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

இன்று நடைபெறும் கூட்டத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்தும் பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 16, 2021, 07:31 AM IST
ஊரடங்கில் மேலும் தளர்வுகள்; முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை title=

இந்தியா முழுவதும் பீதியைக் கிளப்பி பலவித பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மெல்ல குறைந்து வருகிறது. தமிழகத்திலும் இரண்டாம் அலையின் தீவிரம் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்த கட்ட ஊரடங்குகளில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

அதன்படி தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு (TN Lockdown) உத்தரவு வரும் 19 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தற்போது கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், 19-ம் தேதிக்கு பிறகு தளர்வுகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | மாணவர்களின் நலனுக்காக 4ம் கட்ட ஜேஇஇ மெயின் தேர்வு ஒத்திவைப்பு -முழு விவரம்

 

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில் திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களைத் திறப்பது குறித்தும் பேசப்படலாம் என தெரிகிறது.

ALSO READ | TN District Wise Update: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரங்கள்!

இதற்கிடையில் தமிழகத்தில் 2,405 பேர் புதிதாக (TN Covid Update) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  25,28,806 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 148 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 49 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,606 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 29,950 ஆக உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று அரசு மருத்துவமனைகளில் 38 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,606 -ஐ எட்டியுள்ளது. 

தமிழகத்தில் (Tamil Nadu) நேற்று 3,006 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 24,65,250 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக 1,46,665 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 2,405 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  நேற்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,356 ஆண்களும் மற்றும் 1,049 பெண்களும் அடங்குவார்கள்.

ALSO READ | மா.சுப்பிரமணியன் டெல்லி பயணம்: 13 அம்ச கோரிக்கையை அளித்தார் அமைச்சர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News