அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றம் - எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிடம் சாவி ஒப்படைப்பு

AIADMK Headquarters சென்னை உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, இன்று அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி சாவியை எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிடம் ஒப்படைத்தது வருவாய்த்துறை

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 21, 2022, 02:18 PM IST
  • அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றம்.
  • எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிடம் சாவி ஒப்படைப்பு.
  • ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல்.
அதிமுக அலுவலகத்தின் சீலை அகற்றம் - எடப்பாடி கே. பழனிசாமி தரப்பிடம் சாவி ஒப்படைப்பு title=

சென்னை: கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரம் ஶ்ரீவாரி திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அந்த பொதுக்குழுவை புறக்கணித்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றி உள்ளே நுழைந்தார். அப்போது ராயப்பேட்டை அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அதிமுகவை சேர்ந்த சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த கலவரத்தை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அன்று மாலையே தென் சென்னை வருவாய் கோட்டசியர் சாய் வர்தினி தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.

அதேநேரத்தில் அதிமுகவில் இருந்து ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதே கூட்டத்தில் கட்சியை விட்டே நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: ஓங்கியது எடப்பாடி கை | அலுவலகத்தின் சாவியை பெற்றார் பழனிசாமி

இதையடுத்து அலுவலகத்துக்கு உரிமை கோரி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரண்டு தரப்பும் சென்னை நீதிமன்றத்தை நாடின. இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அதில் அ.தி.மு.க. அலுவலகத்தின் சீலை அகற்றி, சாவியை எடப்பாடி கே. பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடுமென்பதால், ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அலுவலகத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் அ.தி.மு.க. அலுவலகத்திற்குப் போதிய பாதுகாப்பை தமிழக காவல்துறை வழங்க வேண்டுமென்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, இன்று காலை 10.55 மணி அளவில் சென்னை மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெக ஜீவன் ராம் ராய்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து கடந்த 11 ஆம் தேதி வைக்கப்பட்ட சீலை அகற்றி அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் ராயப்பேட்டை அலுவலக சாவியை ஒப்படைத்தார். அப்போது முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் உடன் இருந்தார்.

மேலும் படிக்க: அதிமுக அலுவலகம்: இபிஎஸ் வெற்றி, ஓபிஎஸ் தோல்வி ஏன்? 61 பக்க தீர்ப்பின் சாராம்சம் என்ன

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News