Tamil Nadu Rain: இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு

இந்த ஆண்டு பருவமழை தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. டிசம்பர் மாதத்திலும், தொடரும் மழையால், தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அறிக்கைகளை பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2021, 01:40 PM IST
Tamil Nadu Rain: இடி மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு title=

சென்னை: இந்த ஆண்டு பருவமழை தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. டிசம்பர் மாதத்திலும், தொடரும் மழையால், தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அறிக்கைகளை பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. 

எங்கு, என்று, எவ்வளவு  மழை பெய்யும் என தெரிந்துக் கொள்வோம்:

03.12.2021: தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (Weather Forecast) காரணமாக அடுத்த சில நாட்களுக்கான முன்னெச்சரிக்கை:

04.12.2021: கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் .

 05.12.2021: சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

06.12.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் .

07.12.2021:  தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

06.12.2021, 07.12.2021: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகாலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும்.

Also Read | ஓமிக்ரான் அச்சம்! தமிழக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு!

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 
ஆயிக்குடி (தென்காசி) 8, சேரன்மகாதேவி (திருநெல்வேலி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) தலா 7, கன்னியாகுமரி (கன்னியாகுமரி), சிவகிரி (தென்காசி) தலா 6, பெரியார் (தேனி) 5, சூரளக்கோடு (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 4, நாங்குநேரி (திருநெல்வேலி), கோவை  (கோவை), மணிமுத்தாறு (திருநெல்வேலி), சங்கரன்கோவில் (தென்காசி) தலா 3, மயிலாடி (கன்னியாகுமரி), தென்காசி (தென்காசி), ராஜபாளையம் (விருதுநகர்) தலா 2, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), கோயம்புத்தூர் தெற்கு (கோவை), பெரியகுளம் (தேனி), பாபநாசம் (திருநெல்வேலி), தேக்கடி (தேனி), நடுவட்டம் (நீலகிரி), பர்லியார் (நீலகிரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி) தலா 1 .

மீனவர்களுக்கான எச்சரிக்கை: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிசா கடலோர பகுதியை நாளை (04.12.2021) காலை நெருங்ககூடும். அதனை தொடர்ந்து வடக்கு - வடகிழக்கு திசையில் ஒடிசா  கடற்கரை ஒட்டி  நகரும்.

இதன் காரணமாக, 03.12.2021: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று (Weather Forecast) மணிக்கு 70  முதல் 80  கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

04.12.2021: : மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி,   ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில்  புயல் காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

05.12.2021: மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடலோர பகுதிகளில் புயல் காற்று மணிக்கு 60  முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

மேலும் விவரங்களுக்கு:  imdchennai.gov.in  இணையதளத்தை காணவும்.

Read Also | சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா: ஓமிக்ரான் தொற்றா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News