குரூப்-IV கீழ் அறிவிக்கப்பட்ட பணி எண்ணிக்கை அதிகரிப்பு...

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 கீழ் அறிவிக்கப்பட்ட பணி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது...

Last Updated : Nov 25, 2019, 06:04 PM IST
  • பணிகளுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.
குரூப்-IV கீழ் அறிவிக்கப்பட்ட பணி எண்ணிக்கை அதிகரிப்பு... title=

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 கீழ் அறிவிக்கப்பட்ட பணி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது...

இந்த அறிவிப்பின் படி குரூப் 4 கீழ் அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவி ஆகியவற்றை உள்ளடக்கி 6, 491 காலி இடங்களுக்கான அறிவிப்பை 9, 398-ஆக அதிகரித்து TNPSC உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4-ல் அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) - 397, ஜூனியர் அசிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி) - 2688, பில் கலெக்டர், கிரேடு - I -34, பீல்டு சர்வேயர் - 509, டிராப்ட்ஸ்மேன்- 74, தட்டச்சர் - 1901 மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் -784 ஆகியவற்றை உள்ளடக்கி 6,491 காலி இடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பை அடுத்து இப்பணிகளுக்கு 16, 29, 865 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இதற்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 5, 575 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. இந்நிலையில் அதற்கான தேர்வு முடிவை TNPSC நிர்வாகம் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி வெளியிட்டது.

அறிவித்த பணிகளுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. தேர்வாணையத்தின் விதிமுறைகளின்படி, 12, 76, 108 பேரின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தொகுதி-4-ல் (குரூப்-4) அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவி ஆகியவற்றை உள்ளடக்கி 6, 491 காலி இடங்களுக்கான அறிவிப்பை 9, 398 ஆக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.

Trending News