மீண்டும் திரைப்படங்களில் நடிக்கிறேன்; தமிழ்நாட்டை பிரிக்காதீர்கள்- நடிகர் வடிவேலு

நகைச்சுவை நடிகர் வடிவேலு, கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 14, 2021, 12:25 PM IST
மீண்டும் திரைப்படங்களில் நடிக்கிறேன்; தமிழ்நாட்டை பிரிக்காதீர்கள்- நடிகர் வடிவேலு title=

கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. இந்த அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக சுகாதாரத்துறை ஒன்றிணைந்து சென்னை உள்பட தமிழகம் (Tamil Nadu) முழுவதிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அனைவரும் நிதியுதவி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி பல்வேறு தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் ஆகியோர் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக தாராளமாக நிதிகளை முதலமைச்சரின் (Mk Stalin) பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். இதைத்தொடா்ந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு (Chief Minister Relief fund) பலா் நிதியளித்து வருகின்றனர். 

ALSO READ | ஒரு வாரத்துக்குப் பின் சென்னையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி முகாம்கள்​

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு (Vadivelu) கொரோனா நிவாரண பணிகளுக்காக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார் வடிவேலு.

முதல்வர் உடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு கூறியதாவது., கூடிய விரைவில் நல்லதே நடக்கும். நம்புங்கள். தமிழ்நாடு முதல்வரை சந்தித்தது எனக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதோடு சந்தோசம் தருகிறது. முதல்வராக பொறுப்பு ஏற்ற பின்னர் அவர் மிகவும் சிறப்பாக பணியாற்றுகிறார். அவரின் செயல்பாடு மெய்சிலிர்க்க வைக்கிறது. உலகமே பாராட்டும் வகையில் கொரோனா பரவலை ஸ்டாலின் கட்டுப்படுத்தி இருக்கிறார்.

அவர் என்னுடைய குடும்பத்தில் ஒருவர் போல பேசினார். முதல்வரின் ஆட்சி பொற்காலமான ஆட்சி. பெண்கள் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மக்கள் வேக்சின் போட தற்போது முன் வந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய வடிவேலு மீண்டும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. விரைவில் நான் ஓடிடியிலும் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன

கொங்கு நாடு சர்ச்சை பற்றி கேட்கிறீர்கள். ராம் நாடு, ஒரத்தநாடு எல்லாம் ஏற்கெனவே உள்ளன. தமிழ்நாடு நன்றாக உள்ளது. அதை ஏன் பிரிக்கவேண்டும். இதையெல்லாம் கேட்கும்போது தலை சுற்றுகிறது என்று கூறினார்.

ALSO READ | தமிழக கொரோனா நிவாரணத்திற்கு நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிவாரண நிதி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News