வேலூர் மக்களவை தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்..!

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது!

Last Updated : Jul 11, 2019, 11:56 AM IST
வேலூர் மக்களவை தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்..! title=

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட, மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முகசுந்தரத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் ஏ.சி.சண்முகம். புதிய நீதிக்கட்சி தலைவரான ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி. 


வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது!

நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தேர்தலில், தி.மு.க. வேட்பாளருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, வேலுார் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஜூலை 11 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஜூலை18 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஜூலை 19 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 22 ஆம் தேதி. ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவித்திருந்தது. 

இந்நிலையில், இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி, வரும் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 19 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது. வேலுார் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணி சார்பில், ஏற்கெனவே போட்டியிட்ட புதிய நீதிக் கட்சி தலைவர், ஏ.சி.சண்முகமும், தி.மு.க., சார்பில், டி.எம்.கதிர் ஆனந்தும், மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

Trending News