செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்: நகரத்தார் சங்கம்!

அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்!  

Last Updated : May 11, 2018, 05:30 PM IST
செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்: நகரத்தார் சங்கம்! title=

அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ ரஜினியால் ஆட்சியை பிடிக்க முடியாது வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என தெரிவித்தார்.

இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில்...!

ரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் ரஜினி தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது புண்படுத்துகிற பேச்சாகும்.

ஆச்சி என்பது நகரத்தார் சமூகத்தில் மணமான பெண்களை குறிக்கின்ற மரியாதைக்குரிய சொல், அவர்களை யார் மேண்டுமானாலும் பிடிக்கலாம் என்று அமைச்சர் கூறியுள்ள நாராசமான வார்த்தைகளை கேட்கிற பொழுது எங்கள் நெஞ்சம் கொதிக்கிறது என்றனர். 
 
இந்நிலையில், காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் சென்னையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending News