எச்சரிக்கை தகவல்!! இன்று மீண்டும் சூறையாட வரும் புழுதி புயல்!

நாட்டில் 13 மாநிலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பொழிவதுடன், புயல் மற்றும் பனிக்கட்டி மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. 

Last Updated : May 8, 2018, 08:58 AM IST
எச்சரிக்கை தகவல்!! இன்று மீண்டும் சூறையாட வரும் புழுதி புயல்!  title=

நாட்டில் 13 மாநிலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பொழிவதுடன், புயல் மற்றும் பனிக்கட்டி மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. 

இது பற்றி மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், வானிலை ஆய்வு மைய அறிக்கை குறித்து கூறியதாவது:- ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாசல பிரதேச மாநிலங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பொழிவதுடன், புயல் மற்றும் பனிக்கட்டி மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. அதேபோல், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் சில குறிப்பிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழையோடு பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் அசாம்,  மேகாலயம், நாகாலாந்து, மணிப்பூர், மிஸோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதவிர, ஹரியாணா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசத்தம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழையோடு பலத்த காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு ராஜஸ்தானில் இடியுடன் கூடிய மழையோடு, புழுதிப் புயலுக்கும் வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர். 

டெல்லியை புரட்டி போட்ட புழுதி புயல்! VIDEO உள்ளே!

 

டெல்லியை சுற்றியடுத்த புழுதி புயல்: மீண்டும் எச்சரிக்கை!

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தபடி தலைநகர் டெல்லியில் நேற்று நள்ளிரவு சுமார் 11.20 மணியளவில் பயங்கர புழுதி புயல் தாக்கியது. இந்த புயலானது மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியுள்ளது. மேலும் டெல்லி மற்றுமின்றி சண்டிகர், அரியானா, மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த புயல் தாக்கியது. 

தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, டெல்லியில், இன்று பிற்பகல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மிகுந்த எச்சரிக்கையுடன் ரயில் இயக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மேலும் 20 மாநிலங்களில் மோசமான வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நேற்று ஏற்ப்பட்ட புழுதி புயல் காரணத்தால் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஒரு சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் சில விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டது. 

இந்நிலையில் அவசர காலத்தில் உதவும் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் டெல்லிவாசிகள் வெளியில் செல்வதற்கு முன்பு வானிலை எச்சரிக்கை தகவலை கேட்டுவிட்டு பயணத்தைத் தொடர வேண்டும் என டெல்லி போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

Trending News