பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் நவ்ஜோத் சிங் சித்து நேற்று திடீர் என்று மேல்-சபை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சி வட்டாரத்தில் கேட்ட போது:- சித்து எங்கள் கட்சியில் இணைந்தால் வரவேற்போம் என்று தெரிவித்தனர்.
கடந்த 2015-ம் ஆண்டு டெல்லி சட்டப் பேரவை தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் டெல்லியில் இலவச வை-பை வசதி தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கிழக்கு டெல்லியில் 500 இடங்களில் கட்டணமில்லா வை-பை வசதி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என டெல்லி அரசு நேற்று அறிவித்துள்ளது. இந்த திட்டம் மாநில தகவல் தொழில் நுட்பத் துறை அமல்படுத்தும். இதற்கான டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் தெரிவித்துயுள்ளனர்.
டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியைச் சேர்ந்த 21 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 21 எம்.ஏல்.ஏக்களுக்கு ஆதாய பதவி வழங்கும் சட்ட திருத்தத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால், கடந்த மாதம் பாராளுமன்ற செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ள 21 எம்.எல்.ஏக்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.