பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலுபிரசாத்தின் மகள் மிசா பாரதிக்கு சொந்தமான டெல்லி அலுவலகத்தில் அமலாக்கத்துறை கடந்தவாரம் அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.8 ஆயிரம் கோடி பண மோசடி செய்ததாக தெரிய வந்தது.
இதேபோல் அவருடைய கணவர் ஷைலேஷ் குமார் மற்றும் பண மோசடியில் முக்கிய தொடர்பு உள்ளதாக கூறப்படும் மிஷைல் பிரிண்டர்ஸ் ஆகியவற்றின் அலுவலகங்களிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
லாலுபிரசாத் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கில் சிபிஐ 12 இடங்களில் சோதனை நடத்திய மறுநாளில் அமலாக்கத்துறை இந்த சோதனையில் ஈடுபட்டது.
ரூ.1000 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கு தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் மகளுமான, எம்.பி.யுமான மிஸா பாரதி மற்றும் அவரது கணவர் சைலேஷ் குமார் ஆகியோருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் ரூ.1000 கோடி மதிப்பிலான நிலங்கள் பினாமி பெயரில் அவரது குடும்பத்தினருக்கு கைமாறியதாக பாஜக அண்மையில் குற்றம்சாட்டியது. மேலும், இந்த நிலங்கள் யாவும் லாலுவின் மகள் மிஸா பாரதி உள்பட அவரது குடும்பத்தினர் இயக்குநர்களாக அங்கம் வகிக்கும் சில போலி நிறுவனங்களின் பெயரில் பதிவாகியிருப்பதாகவும் கூறப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கி கணக்கில் ரூ.104 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் மாயாவதியின் சகோதரரின் கணக்கில் ரூ.1.43 கோடியும் முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, ரூபாய் நோட்டு டெபாசிட் விவகாரத்தில் தன்னுடைய கட்சி விதிமுறைகளை சரியாக பின்பற்றுகிறது என்று கூறிஉள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கி கணக்கில் ரூ.104 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் மாயாவதியின் சகோதரரின் கணக்கில் ரூ.1.43 கோடியும் முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்டது குறித்து அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 ருப்பை மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அறிவிப்பினால் சட்டத்திற்கு புறம்பாக பரிவர்த்தனை செய்யும் நபர்கள் கடுமையான சிக்கலை சந்தித்து வருகின்றனர். அரசு அங்கீகாரம் இல்லாமல் தொழில் செய்து வங்கிக் கணக்குகளை பயன்படுத்தாமல் பல லட்சம் ரொக்கமாக வைத்திருப்போர், அந்த பணத்தை மாற்றுவதற்கு பல்வேறு வகையில் கையாள்கின்றனர். இதனை முறியடிக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.