தால் ஏரியின் அருகில் வசிக்கும் மக்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் உட்பட டஜன் கணக்கான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவசர நேரத்தில் அவர்களுக்கு சரியான சிகிச்சை கிடைப்பதில்லை.
எல்லை பாதுகாவல் படை, ஜம்மு காஷ்மீரின் சம்பாவில் பாகிஸ்தான் எல்லையில் சுரங்கப்பாதையை கண்டறிந்துள்ளது. மேலும் சுரங்கப்பாதை உள்ளதா என கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஹிஸ்புல் முஜாஹிதீன் (Hizbul Mujahideen) கமாண்டர் சைபுல்லா ஞாயிற்றுக்கிழமை நகரின் புறநகரில் நடந்த மோதலில் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில், இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் நிலங்கள் வாங்கலாம் என்பது குறித்து நில சட்டத்திற்கான அறிவிக்கையை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது
பயங்கரவாதத்திற்கு பெயர் வாங்கிய காஷ்மீர் இனி பென்சில்களால் பிரசித்தி பெறப்போகிறது. துப்பாக்கிகளின் சத்தங்கள் கேட்ட காஷ்மீரில் இனி தொழிற்சாலைகளின் சத்தங்கள் கேட்கப்போகின்றன.
இந்தியாவில், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த மத்திய அரசைப் போலவே, தானும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்க ஆசைப்பட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிக்கலில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
ஜம்மு-காஷ்மீரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (LoC) பாரமுல்லா மாவட்டத்தின் ராம்பூர் செக்டரில், பல மறைவிடங்கள் இருப்பதைக் கண்டறிந்த இந்திய ராணுவம் அங்கிருந்து பெரும் அளவிலான ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் மீட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஸ்ரீநகர் செக்டரின் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) இன்ஸ்பெக்டர் ஜெனரலாக (IG) ஒரு பெண் IPS அதிகாரி முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் அடுத்து என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, விரைவில் மாநிலத்திற்கு முதல்வர், எம்.எல்.ஏ.க்கள் கிடைப்பார்கள் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார்.
பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ISI இந்திய பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து பயங்கரவாதிகளை பாதுகாக்கவும், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தவும், சில பிரத்யேகப் பணிகளுக்காக பெண்களை சேர்த்து வருகிறது.
பாகிஸ்தானின் கராச்சியில் புதன்கிழமை மாலை நடந்த ஒரு இந்திய எதிர்ப்புப் பேரணியில் நடந்த கிரினேட் தாக்குதலில் 39 பேர் காயமடைந்தனர் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள வெசுவில், பாஜக சர்பஞ்சின் மீது அவரது வீட்டிற்கு வெளியே, சில அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.