மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வேறு இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரினால் காவல்துறை பரிசீலிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை மெரினாவில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று(ஏப்.,25) தீர்ப்பு அளிக்கிறது
மகாத்மா காந்தியின் 149-வது பிறந்தநாளை முன்னிட்டு மெரினாவில் காந்தி சிலைக்கு இன்று பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலரும் மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வின் புகைப்படங்களை முதல்வர் எடப்பாடி பயனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த பிறகு, அங்கு போராட்டம் போன்ற எந்த நிகழ்வுக்கும் போலீஸார் அனுமதி வழங்குவதில்லை. அங்கு 24 மணி நேரமும் போலீஸார் கண் காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 8-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நினைவஞ்சலி நிகழ்ச்சிக்காகவும் இலங்கை மீது ஐ.நா. நட வடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சில தமிழ் அமைப்புகள் இன்று மாலை மெரினாவில் கூடவுள்ளதாக தகவல் வெளியானது.
மெரினாவில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 63 எம்எல்ஏக்கள், 3 எம்.பி.க்கள் உள்பட 2 ஆயிரம் திமுகவினர் மீது மெரீனா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அறிஞர் அண்ணாவின் 48_வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் திமுக அமைதி பேரணி நடத்தினர்.
திமுக கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கம் முதல் அண்ணா நினைவிடம் அமைந்துள்ள மெரினா கடற்கரை அமைதி பேரணி நடத்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.