பிரதமர் மோடி 5 நாள் பயணமாக இன்று சுவீடன் புறப்பட உள்ளார். ஸ்வீடன் தலைநகர் ஸ்டால்ஹோமில் 17ம் தேதி முதல் முறையாக நடைபெறும் ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகிறார்.
சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் தனியார் நாளிதழின் பவள விழாவில் சிறப்பு விருந்தினராக இன்று பிரதமர் மோடி பங்கேற்றார். அதன் பிறகு பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளான இன்று டெல்லியில் உள்ள அவரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.
Prime Minister Narendra Modi pays tributes to #MahatmaGandhi at Delhi's Rajghat #GandhiJayanti pic.twitter.com/YW7FvjBslE
பாஜக ஆளும் மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
இந்த சந்திப்பின் போது, வளர்ச்சி, சமூக நலப்பணிகள் மற்றும் 2019 மக்களவை தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
13 முதல் அமைச்சர்கள் மற்றும் 6 துணை முதல் அமைச்சர் சில அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மக்களவை தேர்தலில் 350 இடங்களுக்கு மேல் கைப்பற்ற வேண்டும் என்பது குறித்து மோடியும், அமித்ஷாவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய சமூதாயத்தை சேர்ந்த அறிஞர்கள் முன்வருவார்கள் என நம்புவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், பிரதமர் மோடியை திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அழைப்பு விடுப்பதற்காக வைத்திருந்த பத்திரிக்கையில் எழுத்து பிழையோடு இருந்தது
ரஷிய ஜனாதிபதி புதினும், பிரதமர் மோடியும் பிரிக்ஸ் மாநாட்டில் சந்தித்தனர்.
பிரிக்ஸ் மாநாடு கோவா மாநிலத்தில் இன்று துவங்கியது. மோசமான வானிலை காரணமாக 9 மணி நேரம் தாமதமாக புதின் இன்று காலை 10.20 மணியளவில் கோவா வந்து சேர்ந்தார். பிரிக்ஸ் மாநாட்டில் ரஷிய ஜனாதிபதி புதினும், பிரதமர் மோடியும் சந்தித்தன. இரு நாட்டின் நலன்களை குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடரந்து கண்காணித்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் திரண்டனர்.
விலைவாசி குறித்து பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி என்ன ஆனது என்று மக்களவையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.