ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்ட அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
தமிகத்தின் பெரும்பாலான கல்லூரிகளுக்கு நேற்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கோயம்புத்தூர் விஓஎஸ் பகுதியில் தீவிர போராட்டம் நடத்த்கி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இதில் கலந்து கொண்டார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என பல்வேறு இடங்களிலும் தொடந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடி நடத்தி வரும் இப்போராட்டத்துக்கு தமிழ் திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இப்போராட்டம் குறித்து நட்சத்திர சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில்:-
"எனது மாநிலம் மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. ஒற்றுமையாக, அமைதியாக போராடுகின்றனர். தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. மதுரையில் நேற்று நடந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போரட்டங்கள் நடத்தி வந்தனர்.
ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் மட்டுமின்றி டெல்லியிலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறது.
கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை நடத்தி தொடர்ந்து வருகின்றனர். போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் பீட்டாவிற்கு எதிராக தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். பீட்டாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன் வைத்து போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவுகளும் பெருகி வருகிறது. சினிமா நடிகர், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர்கள், சின்னத்திரை நடிகர்கள் ஆகியோரும் ஆதரவுதெரிவித்து வருகின்றனர். புதுச்சேரியிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். பீட்டாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன் வைத்து போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவுகளும் பெருகி வருகிறது. சினிமா நடிகர், நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர்கள், சின்னத்திரை நடிகர்கள் ஆகியோரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரியிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலையிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கான தடைகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி போராட்டம் நடத்திவருகிறார்கள்.
இதனிடையில் எங்களுக்கும் தமிழ் கலாசாரம் மீது பற்று உள்ளது என உறுதியாக நிரூபிக்கும் வகையில் அமெரிக்கா, துபாய், அயர்லாந்து, வர்ஜீனியா, மெக்ஸிகோ, சிகாகோ, தென் கொரியா, பாங்காக், ரஷ்யா, மலேசியா, பிலிப்பீன்சு, உக்ரைன் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலையிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும் களமிறங்கி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மாணவர்களும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.