அதிமுகவை விரைவில் ஒன்றுபட்ட பார்க்கலாம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுயது:-
''திமுகவைச் சேர்ந்த 250 பேர் என் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். விரைவில் ஒன்றுபட்ட அதிமுகவைப் பார்க்கலாம்.
நீர் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லி சென்றுள்ளார்.
இன்று மாலை திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையாம்புதூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்க உள்ளது. இதில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவைக்கு வந்தார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர்:-
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அவரது எண்ணத்தின் படி நடைபெறும் இந்த அரசு அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடி அவரது புகழுக்கு பெருமை சேர்த்து வருகிறோம்.
மதுவிலக்கு எதிரான பெண்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதா? என எடப்பாடி பழனிசாமிக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியதாவது:-
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றவை; இத்தகைய போராட்டங்களை பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்து நடத்துவது ஃபேஷனாகி விட்டது என்று குற்றஞ்சாற்றியுள்ளார். மகளிர் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டத்திற்கு, மாநில அரசின் சார்பில் ரூ 2,007 கோடியே 53 லட்சம் மானியமாக வழங்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.
இதைக்குறித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டை குடிசைகளற்ற மாநிலமாக உருவாக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு வீட்டுவசதி திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளார். அந்த வழியில் பின்வரும் புதிய திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மணல் இணைய சேவை இணையதளத்தையும், செல்லிடப்பேசி செயலியையும் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:-
வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு அஞ்சி, மத்திய அரசின் காலில் விழுந்து லாலி பாடும் நிலையில் தமிழக அரசு செயல் படுகிறது என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அதற்கு தமிழக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும் என்று சட்டசபை தொடங்கிய நாளன்றே, நான் சபாநாயகர் அவர்களின் கடிதம் கொடுத்திருந்தேன்.
தமிழக சட்டப் பேரவை ஜனநாயகத்தையும், அவை மரபுகளையும் குழி தோண்டி புதைக்கும் வகையிலான எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடு இருக்கிறது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையில் அவை விதி எண் 110-ன் கீழ் நேற்று ஒரே நாளில் 5 துறைகளுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கிறார். பேரவை ஜனநாயகத்தையும், அவை மரபுகளையும் குழி தோண்டி புதைக்கும் வகையிலான முதல்வரின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.
சட்டசபையில் இன்று கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் பொன்முடி பேசினார்.
அப்போது கல்வித்துறைக்கு மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி ரூ.4,503 கோடி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார் பலவேறு துறைகளின் சார்பில் மத்திய அரசு ரூ.17 ஆயிரம் கோடி தரவேண்டி உள்ளது. அதை நாங்கள் வற்புறுத்தி உள்ளோம். விரைவில் கிடைக்கும். என்றார்.
தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு மறுத்து விட்டதாக சட்டப்சபையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இரண்டாவது நாளான இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து அமைச்சர்களுக்குள் ஒற்றுமை இல்லையா? என்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்வு செய்த இடத்தை மத்திய அரசு மறுத்துவிட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியும், கடலில் மீன் பிடிக்கும் போது படகு கவிழ்ந்தும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இன்று நிதியுதவி வழங்கினார்.
இதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காது நுண் எலும்பு கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 200-வது குழந்தைக்கு செவித்திறன் கேட்கும் கருவியின் செயல்பாட்டினை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.
இதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை என தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஏற்காடு கோடை விழாவை தொடக்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் :-
மாட்டிறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது குறித்து அரசாணை வந்தபிறகுதான் சரியான பதில் சொல்ல முடியும். மக்களிடத்தில் செல்வாக்கு மிக்க, மக்களுக்கு உழைத்து மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படம் சட்டப் பேரவையில் திறக்கப்படும். இதில் எந்தவித தவறும் இல்லை.
மேலும் கட்சியின் வளர்ச்சிப் பணியைப் பற்றி பேச மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை சென்னையில் திங்கள்கிழமை கூட்டுகிறோம்.
சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீராங்கணைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.4 கோடி அளவிலான ஊக்கத் தொகையை தமிழக முதல்வர் பழனிசாமி வழங்கி கவுரவித்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-
அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைக் ஊக்குவிக்கும் வகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினார்.
ரமலான் மாத நோன்பின் போது நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு பள்ளிவாசல்களுக்கு 4,900 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இஸ்லாமிய மக்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க, மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில், அதாவது 9.11.2001 அன்று ஆணையிட்டார்.
கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று வெளியிட்டார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
கைவினைஞர்கள் பற்றியும் அவர்கள் திறமை தொடர்பான தகவல்களையும் சேகரிக்க தனி வலைதளம் தமிழக முதல்வர் அறிவிப்பு.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டது:-
''தமிழகத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்கள் பற்றியும் அவர்கள் திறமை தொடர்பான தகவல்களையும் சேகரித்து தனி வலைதளம் உருவாக்க புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் (Tamil Nadu Innovations Initiatives) 2015-16ல் ரூ.1 கோடி நிதியை தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகத்துக்கு அளித்தது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த 15 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்த, மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சேகர்; பவுஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்;
பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம்; கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி தரப்பு மற்றும் கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி;
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிருஷ்ணகிரி நகராட்சியில் 37 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதாள சாக்கடை திட்டத்தை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.
மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 24 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 20 நிறைவுற்ற திட்டப் பணிகள்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
01.01.2016 முதல் திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 01.01.2017 முதல் அகவிலைப்படியினை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 01.01.2017 முதல் நான்கு சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் இயற்கை மரணத்துக்காக வழங்கப்படும் உதவித் தொகை ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கும், சிறு/குறு விவசாயிகளுக்கும், வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, “தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்”என்ற சமூகபாதுகாப்புத் திட்டம் ஜெயலலிதாவால் 15.8.2005 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.