புது காதலியுடன் பப்பிற்கு செல்ல... குழந்தையை அலெக்ஸாவுடன் விட்டுசென்ற தந்தை - ஓராண்டு சிறை

காதலியுடன் பப்பிற்கு செல்வதற்காக குழந்தையை அமேசான் அலெக்ஸா சாதனத்தின் கண்காணிப்பிற்கு வைத்துவிட்டு சென்ற தந்தைக்கு ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 2, 2023, 12:06 PM IST
  • நள்ளிரவு 2 மணிக்கு குழந்தை நிர்கதியாக நின்றுள்ளத.
  • அந்த குழந்தை தந்தையிடமும், தாயிடமும் மாறி மாறி வளர்ந்து வந்தது.
  • இச்சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.
புது காதலியுடன் பப்பிற்கு செல்ல... குழந்தையை அலெக்ஸாவுடன் விட்டுசென்ற தந்தை - ஓராண்டு சிறை title=

ஐந்து வயது மகளை அமேசான் அலெக்ஸா சாதனத்துடன் தனியாக வீட்டில் விட்டுவிட்டு, காதலியுடன் பப்பிற்கு சென்ற சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அந்த பெண் குழந்தையின் அடையாளம் வெளிவர கூடாது என்பதற்காக அந்த தந்தையின் பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை. 

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 30 வயதான அந்த நபர், போவிஸ் நகரில் உள்ள பில்த் வெல்ஸ் பகுதியில் இருக்கும் அவரது காதலியின் வீட்டில் அவரது குழந்தையை தூங்க வைத்துவிட்டு, அமேசான் அலெக்ஸா அருகில் இருக்க அவர்கள் ப்பபிற்கு சென்றுள்ளனர். அலெக்ஸாவில் உள்ள கேமரா மூலம் குழந்தையை கண்காணிக்க அவர் திட்டமிட்டதாக தெரிகிறது. 

மேலும் படிக்க | பொது வெளியில் நடனமாடிய ஈரானிய இளம் தம்பதியினருக்கு 10 ஆண்டுகள் சிறை!

அவருக்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து நடைபெற்றதாக தெரிகிறது. அதன்படி, அந்த குழந்தை தந்தையிடமும், தாயிடமும் மாறி மாறி வளர்ந்து வருகிறது. இந்த சம்பவம் நடந்த அன்று, அந்த குழந்தை, தந்தையின் காதலி வீட்டு படுக்கையறையில் தூங்கியுள்ளது. அப்போது, அவர்கள் இருவரும் மது அருந்தி வந்தனர். திடீரென இரவு 8 மணியளவில், அவரின் காதலி வெளியே போக வேண்டும் என கூறியுள்ளார். முதலில் குழந்தை இருப்பதால் அவர் வர மறுத்துள்ளார். 

இருப்பினும், அந்த பெண் அவர் வராவிட்டாலும் தான் வெளியே செல்ல போவதாக கூற, அந்த நபர் அலெக்ஸாவின் உதவியை நாடி, காதலியுடன் பப்பிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து, அலெக்ஸா கேமரா மூலம் அவர் குழந்தையை கண்காணித்து வந்ததாக தெரிகறது. தொடர்ந்து, நள்ளிரவு 2 மணியளவில் தோட்டத்தில் குழந்தை ஒன்றின் சத்தம் கேட்பதாக காதலியின் வீட்டருகே இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் குழந்தையை மீட்டு அந்த நபரை போலீசார் கைது செய்தனர். மேலும், அப்போது காதலியின் கழுத்தை நெறித்து அவர் சண்டை போட்டதையும் போலீசார் கவனித்துள்ளார்கள். 

இதனால், அவர் குழந்தையை முறையாக பராமரிக்காத குற்றத்திற்காகவும், ஒருவரின் கழுத்தை வேண்டுமென்றே நெரித்த குற்றத்திற்காகவும் அவரின் மீது வழக்கு தொடரப்பட்டது. இச்சம்பவம், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி நடந்துள்ளது. இந்த வழக்கில், தற்போது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் மேற்கூறிய குற்றங்களை ஒப்புக்கொண்டார். 

அதனால், அவருக்கு 2 ஆண்டு பணியிடை நீக்கம் மற்றும் 12 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தவிட்டது. 

மேலும் படிக்க | Green Comet: 50000 ஆண்டுகள் காத்திருக்க அவசியம் என்ன? இன்றே பச்சை வால்மீனை பாருங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News