நைஜீரியாவில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 45 பேர் பலி

நைஜீரியாவில் 2 பெண்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 45 பேர் பலியானார்கள். 33 பேர் காயமடைந்தனர்.  

Last Updated : Dec 10, 2016, 05:37 PM IST
நைஜீரியாவில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 45 பேர் பலி title=

கனோ: நைஜீரியாவில் 2 பெண்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 45 பேர் பலியானார்கள். 33 பேர் காயமடைந்தனர்.  

நைஜீரியாவின் மடகலி நகரில் உணவு பொருட்கள் மற்றும் துணி விற்பனை செய்யும் சந்தைக்கு, நுகர்வோர் போல் வந்த 2 பெண்கள் தங்களது உடலில் வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இதில் 30 பேர் பலியாகியிருந்ததாக ராணுவம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தில், 45 பேர் பலியாகியுள்ளதாகவும், 33 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்டு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தாக்குதல் சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Trending News