2200 சீக்கியர்களுக்கு விசா வழங்கியது பாகிஸ்தான்

பைசாகி திருவிழாவில் கலந்துகொள்ள, இந்தியாவில் இருந்து செல்லும் 2200 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசாக்களை வழங்கியுள்ளது. 

Last Updated : Apr 10, 2019, 09:39 AM IST
2200 சீக்கியர்களுக்கு விசா வழங்கியது பாகிஸ்தான் title=

பைசாகி திருவிழாவில் கலந்துகொள்ள, இந்தியாவில் இருந்து செல்லும் 2200 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசாக்களை வழங்கியுள்ளது. 

பாகிஸ்தானில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் பைசாகி திருவிழா நடைபெறும். இதில் கலந்துகொள்வதற்காக இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் யாத்திரையாக செல்வது வழக்கம். இந்த ஆண்டு  இந்த விழா ஏப்ரல் 12ம் தேதி துவங்கி ஏப்ரல் 21 தேதி வரை நடைபெற உள்ளது.  

இதையடுத்து இந்த விழாவில் பங்கேற்ற இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சீக்கிய யாத்ரீகர்கள் செல்வார்கள். இந்நிலையில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானில் நடைபெறும் விழாவிற்கு செல்லவுள்ள  2200 சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசாக்களை வழங்கியுள்ளது.

Trending News