ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர் பலி

Last Updated : Nov 6, 2017, 09:40 AM IST
ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர் பலி title=

ஏமன் நாட்டு எல்லை அருகில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி அரேபியா இளவரசர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியா இளவரசர்களுள் ஒருவரும், ஆசிர் மாகாண துணை கவர்னராகவும் பதவி வகித்தவர் மன்சூர் பின் மாக்ரோன். இவர் நேற்று அதிகாரிகள் சிலருடன் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்த பொழுது, ஏமன் நாட்டு எல்லை அருகில் திடீரென ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் சவுதி இளவரசர் மன்சூர் பின் உயிரிழந்தார் என அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Trending News