இலங்கையில் மீண்டும் சமூக வலைதளங்கள் முடக்கம்!

இலங்கையில் நீர்கொழும்பும் பகுதியில் சமூக வலைதளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.

Last Updated : May 6, 2019, 09:43 AM IST
இலங்கையில் மீண்டும் சமூக வலைதளங்கள் முடக்கம்! title=

இலங்கையில் நீர்கொழும்பும் பகுதியில் சமூக வலைதளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளன்று பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. 

இதனையடுத்து தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பலர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இதில் விசா காலம் முடிந்தபிறகும் தங்கியிருப்போர் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே,  நீர்க்கொழும்பு பகுதியில் அமைதியின்மையை அடுத்து சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாவதை தடுக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. 

Trending News