Video: காரில் பர்கர் சாப்பிட்டது குத்தமா... துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்த போலீஸ் - வேலை காலி...

அமெரிக்காவில் கார் ஒன்றில், பர்கர் சாப்பிட்டுக்கொண்டிருந்த இளைஞரை நோக்கி காவலர் பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்திய அதிர்ச்சி வீடியோ வைரலானதை அடுத்து, அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.    

Written by - Sudharsan G | Last Updated : Oct 8, 2022, 04:14 PM IST
  • இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் கடந்த ஞாயிற்றுகிழமை நடந்துள்ளது.
  • காவலரின் உடம்பில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் இந்த சம்பவம் முழமையாக பதிவாகியுள்ளது.
  • முதலில் அந்த இளைஞர் மீதுதான் வழக்கு தொடரப்பட்டது.
Video: காரில் பர்கர் சாப்பிட்டது குத்தமா... துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்த போலீஸ் - வேலை காலி... title=

அமெரிக்காவின் சான் அன்டோனியோ நகரில், மெக்டோனால்டு (McDonald's) உணவகத்தின் கார் பார்க்கிங்கில் எரிக் கன்டூ என்ற 17 வயது இளைஞர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது  காரில் அமர்ந்து பர்கர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஜேம்ஸ் பெர்ன்னாட் என்ற காலவர், எரிக்கிடம் விசராணை நடத்தியுள்ள்ளார். 

விசாரணையின் போது, அந்த இளைஞர் காவலரை தாக்கிவிட்டு தனது காரில் தப்பிச்சென்றதாக முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அப்போது, அந்த இளைஞர் தாக்க முற்பட்டபோது, அந்த காவலர் தனது துப்பாக்கியை எடுத்து சுட்டதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த பகுதிக்கு அருகிலேயே அந்த இளைஞரை பிடிப்பட்டுள்ளார். அப்போது, அவர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அவதிப்பட்டுவந்தார். அவரின் காரின் பின்புறம் இளம் பெண் ஒருவரும் இருந்துள்ளார். ஆனால், அவருக்கு எந்த காயமும் இல்லை. 

அந்த இளைஞர் மீது முதலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர், தான் சம்பவம் குறித்த உண்மை தகவல்கள் வெளியாகியது. காவலர் ஜேம்ஸிடன் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமாரவில் அந்த முழு சம்பவமும் பதிவாகியிருந்த நிலையில், அதை ஆய்வு செய்தபோதுதான் உண்மை புலப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Video: அமெரிக்காவில் 4 இந்தியர்கள் கடத்தல்... 2 நாள்களுக்கு பின் உடல்கள் கண்டெடுப்பு!

காவலரின் கூற்றுப்படி, அந்த நபர் மெக்டோனால்டு உணவகத்தின் பார்கிங் ஏரியாவில் ஒரு காரில் அமர்ந்து  பர்கர் சாப்பிட்டது அந்த வீடியோவிலும் உறுதியானது. அப்போது, எரிக்கிடம், காவலர் ஜேம்ஸ் கேள்விக்கேட்டுக்கொண்டிருந்தபோதே, எரிக் காரை இயக்கி பின்னோக்கி நகர ஆரம்பித்தார். 

கார் நகர்ந்து பின்னர்தான், எரிக் தப்பிச்செல்வதை தடுக்க காவலர் தனது துப்பாக்கியை எடுத்து பலமுறை காரை நோக்கி சுடத் தொடங்கினார். இவை அனைத்தும் அந்த கேமராவில் பதிவாகியிருந்தது. விதிப்படி, போலீசார் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த வீடியோவில் காவலர் ஜேம்ஸின் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் ஏதுவும் தெரியவில்லை. அங்கு துப்பாக்கியை பயன்படுத்த வேண்டிய தேவையையும் எழவில்லை என தெரிவிக்கப்பட்டது. 

அந்த இளைஞரிடமோ அல்லது ஏந்த காரிலோ எவ்வித துப்பாக்கிகளும் கைப்பற்றப்படவில்லை. இதனால், அந்த இளைஞர் மீது தொரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. மெக்டோனால்ஸ் உணவகத்தில் இருந்து யாரோ ஒருவர் தங்களுக்கு தொந்தரவு அளிப்பதாக கூறி போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பின்பேரில் தான், காவலர் ஜேம்ஸ்  அங்கு சென்றார். அப்போது, எரிக்கின் காரை பார்த்து சந்தேகம் அடைந்த ஜேம்ஸ் தவறுதலாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர் ஜேம்ஸ் பெர்ன்னாட் பணிநீக்கம் செய்யப்பட்டாதக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | 17 கொலை செய்த சைக்கோ கொலைக்காரனின் கண்ணாடி பல மில்லியனுக்கு விற்பனை - காரணம் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News