பாதுக்காப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 1 தீவிரவாதி பலி!

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லபட்டார்! 

Last Updated : May 5, 2018, 10:43 AM IST
பாதுக்காப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 1 தீவிரவாதி பலி! title=

ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் தொடர்ந்து தீவிரவாதிகளிடம் இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஒரு தீவிர வாதிகள் கொல்லப்பட்டனர். 

பொதுமக்கள் அதிகம் வாழும் சத்தபால் பகுதியில், தீவிரவாத நடமாட்டம் அதிகம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

அப்போது தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்திய ராணுவம், காஷ்மீர் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் இந்த துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு கட்டிடத்தில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை, வீரர்கள் முற்றிலும் சுற்றி வழைத்து துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது! 

 

Trending News