சென்னை-கும்மிடிப்பூண்டி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் ரயில்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. 

Last Updated : Jun 4, 2018, 08:25 AM IST
சென்னை-கும்மிடிப்பூண்டி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு title=

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் புறநகர் ரயில்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. 

நாளொன்றுக்கு 8 சேவைகள் வீதம் 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி - சூலுார்பேட்டை இடையே, ஒன்பது பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து பயண கட்டண உயர்வுக்கு பின், இந்த ரயில்களில், பயணியர் நெருக்கடி அதிகரித்துள்ளது. 

இதனால், ஒன்பது பெட்டிக்கு பதிலாக, 12 பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில்கள் இயக்க வேண்டும். இத்துடன் கூடுதல் ரயில்களும் இயக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை பகுதி மக்கள், ரயில்வேக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையொட்டி, இந்நகரங்களுக்கு, 12 பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில்கள், இன்று முதல் இயக்கப்படுகின்றன.

 

Trending News