7th Pay Commission: ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! DA உயர்வுடன் இந்த சலுகையும் கிடைக்கும்!

அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (ஏஐசிபிஐ) 129 புள்ளிகளுக்கு மேல் இருப்பதைக் கருத்தில் கொண்டு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 12, 2022, 06:26 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.
  • 4 சதவீதம் உயர்த்தப்பட்டபின் 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது.
  • ஜனவரியில் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்த பிறகு 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அதிகரித்துள்ளது.
7th Pay Commission: ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! DA உயர்வுடன் இந்த சலுகையும் கிடைக்கும்! title=

பணவீக்கம் அதிகரித்து வரும் இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  அதன்படி ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்புடன், அவர்களின் டிஏ நிலுவைத் தொகை பற்றிய செய்தியை  அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டபின், ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது.  தற்போது வெளியான அறிவிப்பின்படி, வரும் செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் சம்பளம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இருமுறை அகவிலைப்படியை உயர்த்த பரிசீலித்து வருகிறது.  இந்த திருத்தம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் செய்யப்படுகிறது.  இந்த ஆண்டு ஜனவரியில் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்த பிறகு 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அகவிலைப்படி அதிகரித்துள்ளது.  தற்போது மீண்டும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில்  இப்போது 38 சதவீதமாக அதிகரித்துள்ளது.  அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (ஏஐசிபிஐ) 129 புள்ளிகளுக்கு மேல் இருப்பதைக் கருத்தில் கொண்டு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு, முழு கணக்கீடு இதோ 

செப்டெம்பர் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டு அகவிலைப்படியுடன் கிடைக்கும் என்றும் இதனுடன் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான டிஏ நிலுவைத் தொகையும் சேர்த்து  வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.  இந்த அறிவிப்பின் மூலம் ஒரு ஊழியரின் சம்பளம் ரூ. 20,000 எனில், அவருக்கு 34 சதவீதம் என்ற விகிதத்தில் ரூ.6,800 அகவிலைப்படியாக இருந்தது.  இப்போது அவருக்கு 38 சதவீத அகவிலைப்படி ரூ.7,600 கிடைக்கும், இந்த வகையில் ஊழியரின் சம்பளம் மாதம் ரூ.800 அதிகரிக்கும்.

மேலும் படிக்க | 8th pay commission: புதிய ஓய்வூதியக்குழு அமைக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News