Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்?

Budget 2024 Expectations: வீடு வாங்குபவர்களுக்கு இந்த முறை பட்ஜெட்டில் பெரிய நிவாரணம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட்டில் புதிய வீட்டு வசதி திட்டத்தை அரசு அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 26, 2024, 11:04 AM IST
  • புதிய வீட்டுத்திட்டம் பற்றிய அறிவிப்பு சாத்தியம்.
  • மக்களுக்கு சொந்தமாக நிரந்தர வீடு இருக்க வேண்டும் என்பதே அரசின் முன்னுரிமை.
  • பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்றால் என்ன?
Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்? title=

Budget 2024: NDA அரசின் முழு பட்ஜெட் ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யப்படும். ஜூலை 22 ஆம் தேதி, நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) NDA அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் இந்த முறை நடுத்தர வர்க்கமும் அதிக  எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் வீடு வாங்குபவர்களுக்கு அரசாங்கம் ஒரு பெரிய பரிசை வழங்கக்கூடும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்ஜெட்டில் புதிய வீட்டுத் திட்டத்தை அரசு அறிவிக்கலாம் என்ற பேச்சும் உள்ளது. இதை பற்றி இங்கே காணலாம். 

Union Budget 2024: புதிய வீட்டுத்திட்டம் பற்றிய அறிவிப்பு சாத்தியம்

வீடு வாங்குபவர்களுக்கு இந்த முறை பட்ஜெட்டில் பெரிய நிவாரணம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட்டில் புதிய வீட்டு வசதி திட்டத்தை அரசு அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது. இது தவிர, வீடு வாங்கும் அல்லது கட்டும் வீட்டுக் கடன் வட்டியில் தள்ளுபடியும் கிடைக்கலாம். இது தவிர, வீட்டுக் கடன் வட்டியில் 3-6% வரை வட்டி மானியத் திட்டம் அறிவிக்கப்படலாம். புதிய திட்டத்தில், 50 லட்சம் வரையிலான மதிப்பிலான வீடுகளுக்கு வட்டி மானியத் திட்டம் அறிவிக்கப்படலாம். இதற்கு முன், 18 லட்சம் வரையிலான வீடுகளுக்கு வட்டி மானியத் திட்டம் இருந்தது. வட்டி மானியத் திட்டத்தின் (Interest subvention scheme) கீழ் வீட்டின் அளவு தொடர்பான விலக்கும் சாத்தியமாகும். செப்டம்பர் மாதம் முதல் புதிய திட்டத்தை அரசு தொடங்கலாம்.

மக்களுக்கு சொந்தமாக நிரந்தர வீடு இருக்க வேண்டும் என்பதே அரசின் முன்னுரிமை

நாட்டில் உள்ள அனைவருக்கும் நிரந்தர வீடுகள் இருக்க வேண்டும் என்பது ஏற்கனவே அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது முதல் கூட்டத்திலேயே இதை மக்களிடம் சுட்டிக்காட்டியுள்ளது. மோடி 3.0 இன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் மோடி விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களின் தேவைகள் தொடர்பான முடிவுகளை எடுத்தார். அதில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் (PMAY) கீழ் 3 கோடி வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்றால் என்ன?

ஜூன் 2015 இல் அரசாங்கம் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (Pradhan Mantri Awas Yojana) அதாவது PMAY ஐ அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் கிராமப்புற இந்தியா மற்றும் நகர்ப்புற இந்தியா ஆகிய இரண்டிலும் செயலில் உள்ளது. கிராமப்புற இந்தியாவில், இது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமப்புறம் (PMAY-G) மற்றும் நகரங்களில், இது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம் (PMAY-U) என்ற பெயர்களில் இயக்கப்படுகிறது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், அரசு வீட்டுக் கடனுக்கு மானியம் வழங்குகிறது. மானியத்தின் அளவு வீட்டின் அளவு மற்றும் வருமானத்தைப் பொறுத்தது. இந்த திட்டத்தின் கீழ், குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் வழங்க வங்கிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் வீட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான அதிகபட்ச கால வரம்பு 20 ஆண்டுகள் ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் PMAY திட்டத்தின் கீழ் 4.1 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | பணத்தை பாதுகாக்கவும், பல மடங்காக பெருக்கவும் மிகவும் சுலபமான வழிமுறை! மனி மேக்கிங் டிப்ஸ்!

இந்த திட்டத்தை யார் பயன்படுத்திக் கொள்ளலாம்?

- ஆண்டு வருமானம் ரூ.18 லட்சம் வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். 
- EWS உடன் தொடர்புடைய ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்களும் இந்தத் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள். 
- திட்டத்தின் பலன்களைப் பெற, விண்ணப்பதாரரின் வயது 18 ஆக இருக்க வேண்டும். 
- மேலும், விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருப்பது அவசியம். 
- ஆனால் ஏற்கனவே நிரந்தர வீடு இல்லையென்றால் மட்டுமே இத்திட்டத்தின் பலனைப் பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 
- குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை இருந்தாலும், இத்திட்டத்தின் பலனைப் பெற முடியாது. 
- இது தவிர, இந்திய அரசு அல்லது மாநில அரசின் ஏதாவது ஒரு வீட்டு வசதித் திட்டத்தின் மூலம் பயன்பெறும் குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் பலன் கிடைக்காது.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? 

இத்திட்டத்தின் பலன்களை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் பெறலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, நீங்கள் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmaymis.gov.in/ க்குச் செல்ல வேண்டும். அதேசமயம் ஆஃப்லைன் விண்ணப்பத்திற்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு செல்ல வேண்டும். விண்ணப்பிக்கும் போது, ​​அடையாள அட்டை, முகவரிச் சான்று, வருமானச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் சொத்து ஆவணங்கள் போன்ற சில ஆவணங்களும் தேவைப்படும்.

மேலும் படிக்க | Budget 2024: வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்க ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷனில் மாற்றமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News