PPF திட்டமிட்டு முதலீடு செய்தால் ரூ.1.11 கோடி பெறலாம்..! எப்படி தெரியுமா?

பொது வருங்கால வைப்பு நிதி, அதாவது PPF என்பது முதலீட்டிற்கான சிறந்த வழி. இதில் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும். வட்டி மற்றும் முதிர்வுத் தொகை வரி விலக்கு உள்ளது. .  

Written by - S.Karthikeyan | Last Updated : May 19, 2023, 06:25 PM IST
  • பிபிஎப் முதலீட்டில் கோடீஸ்வரராகலாம்
  • பிபிஎப் திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது?
  • 20 ஆண்டுகளில் ரிட்டன்ஸ் எவ்வளவு கிடைக்கும்?
PPF திட்டமிட்டு முதலீடு செய்தால் ரூ.1.11 கோடி  பெறலாம்..! எப்படி தெரியுமா?  title=

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப் முதலீட்டுத் திட்டம்) சிறு சேமிப்புத் திட்டத்தின் மிகவும் பிரபலமான முதலீட்டுத் திட்டமாகக் கருதப்படுகிறது. பொது வருங்கால வைப்பு நிதி, அதாவது PPF திட்டம் முதலீட்டிற்கு ஒரு சிறந்த வழி, இது பல நன்மைகளை அளிக்கிறது. இதில், சிறந்த வட்டியுடன், வரி விலக்கு பலன் கிடைக்கும். இதில் முதலீடு செய்வதால் பணம் இழப்பு அபாயம் இல்லை. வருமானத்துக்கு முழு உத்தரவாதம்.

தபால் அலுவலகத்தில் கணக்கு

PPF திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் அருகிலுள்ள தபால் அலுவலகத்தில் கணக்கைத் திறந்து கொள்ளலாம். யார் வேண்டும் என்றாலும் கணக்கு திறந்து கொள்ளலாம் என்பது இந்த திட்டத்தின் சிறப்பம்சம். குறைந்தபட்சம் ரூ. 1000 முதல் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். PPF கணக்கு 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. தற்போது முதலீட்டாளர்களுக்கு 7.1 சதவிகிதம் (PPF வட்டி விகிதங்கள் 7.1) வட்டி வழங்கப்படுகிறது. 

மேலும் படிக்க | PPF: தினமும் ரூ. 300 முதலீடு செய்தால்... ஓய்வு பெறும்போது ரூ. 2. 36 கோடி கிடைக்கும் - எப்படி தெரியுமா?

பணத்தை திரும்ப பெறுதல்

முதலீட்டாளருக்கு இடையில் பணம் தேவைப்பட்டால், அவர் பகுதியளவு திரும்பப் பெறும் விதியின் கீழ் 40 சதவிகிதத்தை எடுக்கலாம். இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 80சி கீழ் வரி விலக்கு பலன் கிடைக்கும். இந்த திட்டத்தின் முதலீடு E-E-E பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது உங்கள் முதலீடு, வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகிய மூன்றும் முற்றிலும் வரி விலக்கு உள்ளது.

கோடீஸ்வரராவது எப்படி?

சரியான திட்டத்துடன் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்தால், முதலீட்டாளர் கோடீஸ்வரராகலாம். அது எப்படி? என்பதை இங்கே பார்க்கலாம். 

* ஒவ்வொரு மாதமும் 9000 ரூபாய் முதலீடு செய்தால், அது ஒரு நாளைக்கு 300 ரூபாய். தற்போதைய 7.1% வட்டி விகிதத்தில், PPF கணக்கில் 9000 ரூபாய் மாதாந்திர முதலீடு 15 ஆண்டுகளில் 29.2 லட்சமாக உயரும்.

* 7.1% வட்டி விகிதத்தில் 20 ஆண்டுகளில் மாதம் ரூ.9000 முதலீடு செய்தால், மொத்த முதிர்வுத் தொகை ரூ.47.9 லட்சமாகவும், 25 வருட முதலீட்டில் இந்தத் தொகை ரூ.74.2 லட்சமாகவும் மாறும். அதேசமயம், 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.9000 முதலீடு செய்தால், முதிர்வுத் தொகை ரூ.1.11 கோடியாக இருக்கலாம்.

* அதேபோல், மாதம் ஒன்றுக்கு ரூ.9,000 பங்களிப்புடன் கூடிய பிபிஎஃப் கணக்கில், 7.1% வட்டி விகிதத்தில், முதிர்வுத் தொகை 35 ஆண்டுகளில் ரூ.1.63 கோடியாகவும், 40 ஆண்டுகளில் ரூ.2.36 கோடியாகவும் அதிகரிக்கிறது. அதாவது ஒரு முதலீட்டாளர் 20 வயதில் இருந்து PPF திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், 60 வயதில் ஓய்வு பெறும் போது, ​​அவருடைய கணக்கில் 2.36 கோடி ரூபாய் இருக்கும்.

மேலும் படிக்க | PPF முதலீட்டாளர்கள் இதை உடனே செய்யுங்கள்... இல்லாவிட்டால் பிரச்னை தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News