வங்கி மற்றும் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள்

Cash Widrawal Rules : சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு வரி செலுத்த வேண்டும், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கும் விதிமுறைகள் உண்டு... அவற்றை அறிந்து கொள்ளுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 25, 2024, 01:31 PM IST
  • வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து எவ்வளவு பணம் எடுக்கலாம்?
  • ரொக்கத்தொகை பரிவர்த்தனைகள்
  • ஆர்பிஐ ரொக்க பணபரிமாற்ற விதிமுறைகள்
வங்கி மற்றும் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் title=

Bank Account Transaction: ரொக்க பணப் புழக்கத்தைக் குறைக்கவும், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்கவும் மத்திய ரிசர்வ் வங்கி, சேமிப்புக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக, 2019 பட்ஜெட்டில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டத்தின் 194Nஇல் அறிமுகப்படுத்தப்பட்ட பணத்தை திரும்பி எடுக்கும்போது விதிக்கப்படும் விதிமுறைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

வங்கிகளில், பணம் எடுக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், கவனமாக இருங்கள். இதுவரை நீங்கள் இலவசமாகப் பணம் எடுத்தீர்கள், ஆனால் இப்போது ஏடிஎம்மில் மட்டுமல்லாது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கும் பரிவர்த்தனை கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். பரிவர்த்தனை வரம்பு ஏடிஎம்மில் மட்டும் அல்ல, நேரடியாக வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) பணத்தை திரும்பப் பெறுவதற்கான விதிகளை அறிவித்துள்ளது. ரொக்கப் பயன்பாட்டைக் குறைக்கவும், டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் குறிப்பாக விதிகளின்படி, ஒருவருக்கு ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான தொகையை ரொக்கமாக செலுத்தும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு இந்த பிரிவு வரி விதிக்கிறது.

இருப்பினும், இந்த விதி 3 ஆண்டுகளாக ஐடிஆர் தாக்கல் (ITR Filing) செய்யாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ITR என்பது ஒரு நபர் அல்லது நிறுவனத்தின் வருமானம் மற்றும் செலவின விவரங்களைக் கொண்ட நிதி தொடர்பான ஆவணமாகும். இதற்கு அவர்கள் மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (டிடிஎஸ்) கட்டணத்தைச் செலுத்த வேண்டும். 

மேலும் படிக்க | HDFC Bank: MCLR விகிதத்தை அதிகரித்தது HDFC... கடனுக்கான EMI அதிகரிக்குமா!

TDS என்பது ஒரு மறைமுக வரியாகும், இது ஒரு நபர் அல்லது நிறுவனம் மற்றொரு நபர் அல்லது நிறுவனத்திற்கு செலுத்திய தொகையிலிருந்து கழிக்கப்படுகிறது. இந்தப் பிரிவு பணப் பரிவர்த்தனைகளைக் குறைப்பதற்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேம்படுத்துவதற்கும் ஆகும்.

பணத்தை வங்கியில் இருந்து எடுப்பதற்கான புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள்

ஒரே நேரத்தில் ரூ.20 லட்சத்திற்கு மேல் பணம் எடுக்க வேண்டுமானால், வாடிக்கையாளர்கள் ஆதார் அல்லது பான் கார்டு தகவல்களை வங்கிகளுக்கு வழங்க வேண்டும். அதேபோல, ஒரு நாளில் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் 1% கட்டணம் விதிக்கப்படும். 

ஒரு மாதத்தில் 10 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் 2% கட்டணம் விதிக்கப்படும். 75,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதற்கு, வங்கிகள் வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாளச் சான்றிதழைக் காட்ட வேண்டும்.

தனிப்பட்ட பயனர்

ஒரே நேரத்தில் ரூ.20 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை எடுக்க, பயனர் ஆதார் அல்லது பான் கார்டு தகவல்களை வழங்க வேண்டும். வங்கிக் கணக்கில் இருந்து ஒரு நாளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் 1% கட்டணம் விதிக்கப்படும். ஒரு மாதத்தில் 10 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதற்கு 2% கட்டணம் விதிக்கப்படும். வணிக உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் போன்ற பணத்தை அதிகமாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த விதி அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | EPF & EPS இரண்டுமே ஓய்வூதியத் திட்டங்கள் தான்... ஆனா, இந்த வித்தியாசங்களை மறந்திடாதீங்க! 

வணிகத் துறையினர்

வணிக நிறுவனங்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 75,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதற்கு, வங்கி, கூட்டுறவு நிறுவனம் அல்லது தபால் அலுவலகம் அதன் வாடிக்கையாளர்களிடம் அடையாளச் சான்றிதழைக் கேட்கலாம். கடைகள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற ரொக்கப் பணம் செலுத்தும் வணிகங்களில் இந்த விதி அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவில் பண பரிவர்த்தனைகளின் அடிப்படையில் பொருளாதாரத்தை அதிக உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு ரொக்கம் திரும்பப் பெறுவது தொடர்பான விதிகள் ஒரு முக்கியமான படியாக இருக்கும். இந்த விதிகள் கருப்புப் பணப் பயன்பாட்டைக் குறைக்கவும், டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் உதவும் என்று ஆர்பிஐ நம்புகிறது.

மேலும், இந்த விதிமுறைகள், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் நாட்டில் ஊழலைக் குறைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ரொக்கப் பரிவர்த்தனைகளை விட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது மற்றும் வெளிப்படையானது என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது.

மேலும் படிக்க | SIP: வெறும் 500 ரூபாயில் முதலீட்டை தொடங்கி 21 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News