காவிரி விவகாரம்: ஸ்கீம் குறித்து உச்சநீதிமன்றம் புதிய விளக்கம்!!

காவிரி விவகாரம் தொப்டர்பாக ஸ்கீம் என்ற வார்த்தைக்கு புதிய விளக்கத்தை கூறியுள்ளது உச்சநீதிமன்றம்! 

Last Updated : Apr 2, 2018, 01:00 PM IST
காவிரி விவகாரம்: ஸ்கீம் குறித்து உச்சநீதிமன்றம் புதிய விளக்கம்!!  title=

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. 

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். 

இதையடுத்து, இன்று உச்சநீதிமன்றம் இந்த நீதிமன்றம் அவமதிப்பு வழக்கை வருகின்ற ஏப்ரல் 9-ம் தேதி விசாரிக்க உள்ளதாக தெரிவித்தது.இதனிடையே காவிரி தீர்ப்பில் ஸ்கீம் என்ற வார்த்தை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக வழக்கறிஞர் கருத்து தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, காவிரி விவகாரம் தொப்டர்பாக ஸ்கீம் என்ற வார்த்தைக்கு புதிய விளக்கத்தையும் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றம்:- ஸ்கீம் என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியம் என்பதை மட்டும் குறிக்கவில்லை. காவிரி பிரச்னையைத் தீர்க்கும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக ஸ்கீம் இருக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியமும் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு கீழ் அடங்கும் என உச்சநீதிமன்றம் விளக்கம் கொடுத்துள்ளது.

Trending News