IPL_2018: என்னடா இது சென்னை அணிக்கு வந்த சோதனை!

அடுத்தடுத்து வீரர்களை இழந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர்-ரையும் இழந்துள்ளது! 

Last Updated : Apr 29, 2018, 01:50 PM IST
IPL_2018: என்னடா இது சென்னை அணிக்கு வந்த சோதனை! title=

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக அடுத்த இரண்டு வாரங்கள் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார்!

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11-வது சீசன் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் பிரமாண்டமாக நடந்து வருகிறது. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி தனது ஒட்டுமொத்த ரசிகர்களின் இரண்டு வருட எதிர்பார்ப்பை வீணடிக்காமல் ஒவ்வொரு போட்டியில் மாஸ் காட்டி வருகிறது.

இதுவரையில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி அதில் 5 போட்டிகளில் வெற்றியும், இரண்டு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது.இந்த நிலையில் சென்னை அணியின் பந்துவீச்சிற்கு மேலும் ஒரு பின்னடைவாக சென்னை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் காயம் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். 

மும்பை அணியுடன் நடந்த நேற்றைய போட்டியில் தீபக் சாஹர் தனது 3-வது ஓவர் வீசும் போது காயமடைந்ததால், பாதியிலேயே போட்டியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில், அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய சில நாட்கள் தேவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் தீபக் சாஹர் அடுத்த இரண்டு வாரங்கள் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவதாக சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் அணியில் இருந்து விலகியிருப்பது சென்னை அணிக்கு மேலும் ஒரு இழப்பை கொடுத்துள்ளது!

Trending News