Tamil Nadu: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கடந்த ஆண்டு முதல் உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறின. தற்போது, செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழகத்தின் பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்புகள் வரை திறக்கப்படவுள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 27, 2021, 08:02 PM IST
  • செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கின்றன
  • வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
  • முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்
Tamil Nadu: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு title=

கடந்த ஆண்டு முதல் உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறின. தற்போது, செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழகத்தின் பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்புகள் வரை திறக்கப்படவுள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கம் முடியும்வரை, பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாள்களும் செயல்படும். வகுப்புகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்படவுள்ளனர். 

அதேபோல, தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒவ்வொரு ஆண்டு மாணவர்களுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நேரடியாக நடைபெற வேண்டும்.

Also Read | ஆகஸ்ட் 27: இன்று தமிழகத்தில் 1542 பேருக்கு புதிதாக கோவிட் பாதிப்பு

இளங்கலை 2-ம் ஆண்டு, முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் வகுப்பு நடைபெற வேண்டும். இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வகுப்பு நடைபெறும்.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். பொறியியல் படிப்புகளுக்கும், ஒவ்வொருஆண்டு மாணவர்களுக்கும் ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடத்தப்படும்.

உயர்கல்வி நிலையங்களில் உள்ள விடுதிகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விடுதிகள் செயல்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

READ ALSO | இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் அதிகரித்துவிட்டது; உலக சுகாதார மையம் எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News