குரூப் 4 தேர்வு; TNPSC வெளியிட்ட முக்கிய அப்டேட்

குரூப் 4 தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 27, 2021, 06:08 PM IST
  • டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 பாடத்திட்டம் தொடர்பான குழப்பம்
  • புதிய விளக்கத்தை கொடுத்துள்ளது டி.என்.பி.எஸ்.சி
  • விரைவில் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என அறிவிப்பு
குரூப் 4 தேர்வு; TNPSC வெளியிட்ட முக்கிய அப்டேட் title=

டி.என்.பி.எஸ்.சி (TNPSC) வெளியிட்ட ஆண்டறிக்கையின்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் மாணவர்கள் கடுமையான பயிற்சி எடுத்து வருகின்றனர். அதேநேரத்தில், வினாத்தாள் தொடர்பாக தேர்வர்களுக்கு குழப்பம் இருந்து வருகிறது. ஏனென்றால், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் ஆங்கில மொழித்தாள் நீக்கப்பட்டு, தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ALSO READ | TNPSC: குரூப் 2 தேர்வுகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்து? அரசு பரிசீலனை

இதனால், பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறுமா? அல்லது புதியதாக பாடத்திட்டம் வெளியிடப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இதுகுறித்து கவலைப்பட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. தேர்வர்களிடையே எழுந்துள்ள சந்தேகங்களைப் போக்கும் வகையில் விரைவில் குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் புதியதாக வெளியிடப்படும் எனக் கூறியுள்ளது. அந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டால் போதும் எனத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப் பணிக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வை எழுத தமிழகம் முழுவதும் லட்சகணக்கானோர் காத்திருக்கின்றனர். கொரோனா காரணமாக தனியார் வேலை வாய்ப்புகளை இழந்தவர்களும், மும்முரமாக தேர்வுக்கு படிக்கின்றனர். புதியதாக ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, தமிழுக்கும், தமிழக மாணவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வினாத்தாளையும், பாடத்திட்டத்தையும் மாற்றியமைத்துள்ளது. ஆனால், அதுதொடர்பான சந்தேகங்கள் மாணவர்களிடம் இருந்தநிலையில், டி.என்.பி.எஸ்.சி புதிய விளக்கத்தை கொடுத்துள்ளது. அடுத்தாண்டு வெளியாக இருக்கும் குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேலாக இருக்கும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News