மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என மோடி வேண்டுகோள்..!

சட்டசபை தேர்தலை முன்னிட்டு மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!!

Last Updated : Oct 21, 2019, 10:44 AM IST
மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என மோடி வேண்டுகோள்..! title=

சட்டசபை தேர்தலை முன்னிட்டு மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!!

பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் அரியானா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பாஜக 164 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

இதேபோல் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 147 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 121 இடங்களிலும் களம் காண்கின்றன. இதுதவிர ராஜ்தாக்கரேயின் நவநிர்மாண் சேனா, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. இருமாநிலங்களில் பதியப்படும் வாக்குகள் வரும் 24 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலை முன்னிட்டு மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றங்களுக்கான தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இடைத்தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநிலங்களிலும், இடங்களிலும் உள்ள வாக்காளர்கள் பதிவு எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தின் பண்டிகையை வளப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

 

Trending News