17 வயது சிறுமி கூட்டு வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட பலி!

மேவாத் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் கடத்தி வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : May 3, 2018, 02:04 PM IST
17 வயது சிறுமி கூட்டு வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட பலி! title=

ஹரியானா: மேவாத் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் கடத்தி வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

கடந்த திங்கள் அன்று ஹரியானாவின் நூவா பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை, அவர் வீட்டில் தனியாக இருந்தபோது மோட்டார் சைக்கிலில் வந்த இருவர் கடத்தி சென்றுள்ளனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் சிறுமியை தேடிய காவல்துறையினர் அப்பகுதிக்க அருகாமையில் யாரும் இல்லா இடத்தில் சிறுமியை மயங்கிய நிலையில் கண்டுபிடித்தனர்.

பின்னர் மருத்துவ சிகிச்சையின் போது சிறுமி கூட்டு வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. பின்னர் மருத்துவசிகிச்சை முடிந்து அவர் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டில் தனியாக இருந்த சிறுமி இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொன்டார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொன்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் சிறுமியின் குடும்பத்தாருக்கு தெரிந்தவர்கள் தான் என தெரியவந்துள்ளது.

Trending News