நெல்லிக்காய் தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமா; வாங்க தெறிஞ்சிக்கலாம்

நெல்லிக்காய் நீரை உட்கொள்வதன் மூலம், பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நெல்லிக்காய் நீர் உடலுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 29, 2022, 04:26 PM IST
  • நெல்லிக்காய் நீர் பயன்கள்
  • உடலுக்கு இந்த நன்மைகள் கிடைக்கும்
  • தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக இருக்கும்
நெல்லிக்காய் தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையுமா; வாங்க தெறிஞ்சிக்கலாம் title=

நெல்லிக்காய் ஒரு பழமாகும், இது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். நெல்லிக்காயில் மருத்துவ குணங்கள் அதிகளவில் நிறைந்துள்ளன, இது பல ஆயுர்வேத மருத்துவ பயன்களில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது ஆனால் பல தோல் பராமரிப்பு, முடி பராமரிப்பு சப்ளிமெண்ட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காய் முராப்பா, நெல்லிக்காய், நெல்லிக்காய் பொடி, நெல்லிக்காய் ஜூஸ் என பல வழிகளில் நெல்லிக்காயை உட்கொள்ளலாம். ஆனால் இவற்றில் நெல்லிக்காய் தண்ணீர் அதிகளவு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படிப்பட்ட நிலையில் நெல்லிக்காய் தண்ணீர் தயாரிப்பது எப்படி என்றும் அதன் பலன்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

நெல்லிக்காய் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு இந்த நன்மைகள் கிடைக்கும்-

வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்-
நெல்லிக்காய் தண்ணீரை காலையில் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். எனவே தினமும் இதனை உட்கொள்ளலாம்.

மேலும் படிக்க | Neem Bad Side: அமிர்தமே நஞ்சாகும்: இது வேப்பிலை சொல்லும் தத்துவம் 

தோல் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருகக்கும்-
நெல்லிக்காய் தண்ணீர் ஒரு நல்ல நச்சு பானம் மற்றும் இரத்தத்தை சுத்திகரிக்கும். இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் நச்சுகளை நீக்குகிறது. இதன் காரணமாக முகத்தில் பொலிவைத் தருவதுடன், முகப்பரு, தழும்புகள் போன்ற பிரச்சனைகளையும் நீக்குகிறது. அதுமட்டுமின்றி, தினமும் சாப்பிட்டு வந்தால், முடி உதிர்தல், பொடுகு போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.

எடை குறைக்க உதவும்-
நீங்கள் தினமும் நெல்லிக்காயை தண்ணீர் குடித்து வந்தால், அது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக உணவு செரிமானம் சிறப்பாக இருக்கும் மற்றும் அதிக கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

கண்பார்வையை அதிகரிக்கிறது-
நெல்லிக்காயில் வைட்டமின் ஏ, சி நிறைந்துள்ளது, இது கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். அத்தகைய சூழ்நிலையில் நெல்லிக்காய் தண்ணீர் குடிப்பதால் கண்பார்வை மேம்படும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பளபளக்கும் தோலை கெடுக்கும் உணவுகள் இவை; இளமை பராமரிக்க தவிர்த்துவிடுங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News