இந்தியாவில் Covishield விலை ₹200 ஆக இருக்கும் என தகவல்

ஜனவரி 16 முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணியை தொடங்க இந்தியா தயாராகி வரும் நிலையில், இந்த தடுப்பூசி இந்தியாவில் ₹ 200  என்ற விலையில் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 11, 2021, 06:38 PM IST
  • இன்று பிரதமர் மோடி, மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் நடத்திய ஒரு மெய்நிகர் கூட்டம் நடத்தினார்.
  • அதில் தடுப்பூசி போடும் பணிக்கான தயார் நிலை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
  • இந்தியா முழுவதும் தடுப்பூசி போட 5,000 இடங்களை மத்திய அரசு இறுதி செய்துள்ளது.
இந்தியாவில் Covishield விலை ₹200 ஆக இருக்கும் என தகவல் title=

ஜனவரி 16 முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணியை தொடங்க இந்தியா தயாராகி வரரும் நிலையில், இந்த தடுப்பூசி இந்தியாவில் ₹ 200  என்ற விலையில் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

 ஜனவரி 11 திங்கள் அன்று சீரம் இன் நிறுவனத்திற்கு (Serum Institute of India -SII)  மருந்து சப்ளை செய்வதற்கான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளதாக, ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 16 முதல் இந்தியாவில் (India) தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த தகவல் வெளியாகியுள்ளது. "ஜனவரி 16 ஆம் தேதி, கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதில் இந்தியா ஒரு முக்கிய நடவடிக்கை மேற்கொள்கிறது. நமது துணிச்சல் மிக்க மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட களத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் ”என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்திருந்தார்.

மேலும், இன்று பிரதமர் மோடி (PM Narendra Modi),  மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் நடத்திய ஒரு மெய்நிகர் சந்திப்பில், தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ள நிலையில், அதன தயார்நிலை குறித்து ஆலோசனை செய்தார்.

தற்போது, தேசிய தலைநகர் தில்லியில் 89 மருத்துவமனைகள் தடுப்பூசி (Corona Vaccine) போடும் பணிக்காக முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 89 மருத்துவமனைகளில் 40 அரசு மருத்துவமனை மற்றும் 49 தனியார் மருத்துவமனை.

இந்தியா முழுவதும் தடுப்பூசி போட 5,000 இடங்களை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. "மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, டெல்லியில் உள்ள 89 மருத்துவமனைகளை தில்லி அரசு தயார் செய்துள்ளது" என்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

"ஒவ்வொரு மையத்திலும், தடுப்பூசி போடும் பணியை 8-9 பேர் கையாள்வார்கள்.  தில்லி அரசு தடுப்பூசி போடும் முதல் கட்ட பணியை ஜனவரி 16 முதல் தொடங்கும்" என அவர் மேலும் கூறினார்.

ALSO READ | Diabetes: நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் வெங்காயம்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News