7th Pay Commission: தீபாவளிக்கு முன்னரே அரசு ஊழியர்களுக்கு பரிசு காத்திருக்கிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்கான அகவிலைப்படியும் செப்டம்பர் மாதத்திலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தீபாவளிக்கு முன்பே மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 5, 2021, 03:06 PM IST
  • 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 61 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் நல்ல செய்தி.
  • தீபாவளிக்கு முன்பே மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு கிடைக்கும்.
  • அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றில் இருந்த முடக்கத்தை 2021 முதல் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
7th Pay Commission: தீபாவளிக்கு முன்னரே அரசு ஊழியர்களுக்கு பரிசு காத்திருக்கிறது title=

7th Pay Commission: 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 61 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கும் நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர்களை வந்து சேராமல் இருந்த அகவிலைப்படி ஜூலை மாத சம்பளத்துடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இப்போது அது செப்டம்பர் மாத இறுதியில் கிடைக்கும் என கூறப்படுள்ளது. 

இது மட்டுமல்லாமல், மூன்று மாதங்களுக்கான அகவிலைப்படியும் செப்டம்பர் மாதத்திலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தீபாவளிக்கு முன்பே மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு கிடைக்கும்.

செப்டம்பரில் பெரிய தொகையை பெறலாம்

செப்டம்பர் மாத சம்பளத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரித்த அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றுடன், கடைசி மூன்று நிலுவைத் தொகையும் சேர்த்து அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, செப்டம்பர் மாதத்தில், மத்திய அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் ஒரு பெரிய தொகை வரவுள்ளது. 

அமைச்சரவை செயலாளர் தலைமையில் நிதி அமைச்சகம் மற்றும் டிஓபிடி (பணியாளர் மற்றும் பயிற்சித் துறை) உடனான சந்திப்பில், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றில் இருந்த முடக்கத்தை 2021 முதல் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ: 7th Pay Commission: இந்த அரசு ஊழியர்களின் medical reimbursement 5 மடங்கு அதிகரித்தது 

அகவிலைப்படி 11% அதிகரிக்கும்

நீங்கள் மத்திய அரசு ஊழியராக இருந்தால், உங்களுக்கு ஒரு பெரிய செய்தி காத்திருக்கிறது. அகவிலைப்படியில் உள்ள முடக்கம் நீக்கப்பட்ட பின்னர், செப்டம்பர் மாதத்தில் உங்கள் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை இங்கே காணலாம். 

தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) 17% என்ற விகிதத்தில் அகவிலைப்படி கிடைக்கிறது. அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்ட பின்னர், இது 11 சதவீதம் அதிகரித்து 28 சதவீதமாக உயரும். அதாவது, ஜூலை 1, 2021 இன் அடிப்படை சம்பளத்திலிருந்து டி.ஏ.-வில் 11 சதவீதம் அதிகரிப்பு இருக்கும். இதே சூத்திரம் அகவிலை நிவாரணத்துக்கும் (Dearness Relief) பொருந்தும்.

செப்டம்பர் மாதம் இந்த அளவு அகவிலைப்படி கிடைக்கும் 

மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளத்தில் நல்ல அதிகரிப்பு இருக்கும். ஜனவரி 2021 மற்றும் ஜூலை 2021 க்கான அகவிலைப்படி செப்டம்பரில் அறிவிக்கப்படும் என்று ஜே.சி.எம் தேசிய கவுன்சிலின் சிவ கோபால் மிஸ்ரா கூறுகிறார். ஆகையால், மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் இப்போது இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். சிவ் கோபால் மிஸ்ராவின் கூற்றுப்படி, கிளாஸ் 1 ஊழியர்களின் டிஏ நிலுவைத் தொகை ரூ .11,880 முதல் ரூ .37,554 வரை இருக்கும். அடுத்த நிலை -13 அதாவது 7 வது சிபிசி அடிப்படை ஊதிய அளவான ரூ .1,23,100 முதல் ரூ .2,15,900 அல்லது நிலை -14-ன் ஊதிய அளவு  கணக்கிடப்பட்டால், மத்திய அரசு ஊழியரின் டிஏ நிலுவைத் தொகை ரூ .1,44,200 முதல் ரூ .2,18,200 வரை இருக்கக்கூடும்.

ALSO READ: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அரியர் நிலுவை கிடைக்கும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News