48-வயது இளம்பெண்னை பலாத்காரம் செய்த வாலிபருக்கு வலைவீச்சு!

இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ள ப்ரிட்டீஸ் பெண்மனி ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்து தப்பிச்சென்ற வாலிபரை கோவா காவல்துறையினர் தேடி வருகின்றனர்!

Last Updated : Dec 20, 2018, 04:18 PM IST
48-வயது இளம்பெண்னை பலாத்காரம் செய்த வாலிபருக்கு வலைவீச்சு! title=

இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ள ப்ரிட்டீஸ் பெண்மனி ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்து தப்பிச்சென்ற வாலிபரை கோவா காவல்துறையினர் தேடி வருகின்றனர்!

இன்று விடியற்காலை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணி கோவா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் குறிப்பிட்டுள்ளாதாவது., கானகோனா நாகரத்தில் இருந்து ரயில்வே நிலையத்திற்கு சென்ற பெண்மனியை, மர்ம நபர் ஒருவர் தெற்கு கோவா-வின் பலோமியன் கடற்கரை ஓரமாக கடத்திச் சென்றுள்ளார். பின்னர் அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

குற்றத்திற்கு பின்னர் அவரது உடமைகளையும் அவர் எடுத்துச் சென்றுள்ளார். 

பாதிக்கப்பட்ட பெண்மனி கடந்த 10 ஆண்டுகளாக கோவா-விற்கு அடிக்கடி சுற்றுலா வருவதினை வழக்கமாக கொண்டுள்ளார். இதன் காரணமாக மற்றவர்களின் துணை இல்லாமல் நகரத்தில் பயணிக்கும் தைரியம் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று தனியே நடந்து சென்ற இப்பெண்மனியினை, அருகில் இருக்கும் வயல்வெலிக்கு குற்றவாலி இழுத்துச் சென்று தாக்கியுள்ளார். சுயநினைவினை இழந்த பெண்மனியினை குற்றவாலி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், சந்தேகத்திற்கு இடமாக இருக்கும் உள்ளூர் நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News