கார்கி கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல்: டெல்லி போலீசார் FIR பதிவு!!

கடந்த வாரம் டெல்லி பல்கலைக்கழகத்தின் கார்கி கல்லூரியில் ஒரு கலாச்சார விழாவின் போது மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்ததுள்ளது.

Last Updated : Feb 10, 2020, 04:20 PM IST
கார்கி கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல்: டெல்லி போலீசார் FIR பதிவு!! title=

கடந்த வாரம் டெல்லி பல்கலைக்கழகத்தின் கார்கி கல்லூரியில் ஒரு கலாச்சார விழாவின் போது மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்ததுள்ளது.

டெல்லியில் கார்கி கல்லூரி என்ற மகளிர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வரும் இந்தக் கல்லூரியின் ஆண்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த கலாச்சார நிகழ்வின் போது கல்லூரிக்குள் மது போதையில் நுழைந்த சிலர் மாணவிகள் பலரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளனர். 

இந்த சம்பவத்தின் போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படையினரும், போலீசாரும் ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்ததாகவும் மாணவிகள் குற்றம்சாட்டி உள்ளனர். இது தொடர்பான தகவலை அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்., ரெவெரி என்று அழைக்கப்படும் மூன்று நாள் நீடித்த விழாவின் கடைசி நாளான வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சில ஆண்கள், அடையாள அட்டை இல்லாமல் வளாகத்திற்குள் நுழையத் தொடங்கினர். அதில் போதையில் இருந்த நடுத்தர வயது ஆண் ஒருவர் எங்களை பாலியல் ரீதியாகக் கட்டாயப்படுத்தினார். மேலும் பல விதமான பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டனர் என்றும் கூறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பளம் நடந்த அன்று தாங்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக கல்லூரி மாணவிகள் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இருப்பினும் இதுவரை எவரும் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கல்லூரி முதல்வர் கூறுகையில், சம்பவம் நடைபெற்ற அன்று கல்லூரியில் போலிஸார், பாதுகாப்பு அதிகாரிகள் என முழுக்கண்காணிப்பில் இருந்தனர். மாணவிகள் கூறுவதுபோல எதுவும் நடந்திருக்கவாய்ப்பில்லை. வெளியில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு கல்லூரி நிர்வாகம் தலையிட முடியாது” என அக்கறையின்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து கல்லூரி வளாகத்திற்குள் மாணவிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் இந்த சம்பவம் நடந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போது இந்த சம்பவம் குறித்து மக்களவையிலும் எழுப்பப்பட்டது. இதற்கிடையில், முழு சம்பவத்திற்கும் கார்கி கல்லூரி முதல்வர் புரோமிலா குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இதற்கிடையில், முழு சம்பவத்திற்கும் கார்கி கல்லூரி முதல்வர் புரோமிலா குமார் மன்னிப்பு கோரியுள்ளார். கல்லூரி அதிகாரத்திடம் புகார் வந்ததையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை கூடுதல் டி.சி.பி கீதாஞ்சலி கண்டேல்வால் விசாரித்து வருகிறார்.

ஹவுஸ் காஸ் காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 452, 354, 509, 34 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், டெல்லிமகளிர் ஆணையம் கார்கி கல்லூரியின் முதல்வர் டாக்டர் புரோமிலா குமாரை வரவழைத்து, பிப்ரவரி 12 ஆம் தேதி பிற்பகல் 2:00 மணிக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

பிப்ரவரி 6 ம் தேதி கல்லூரி வளாகத்திற்குள் நடந்த இந்த விவகாரத்தில் விசாரணைக்கு கல்லூரியின் பாதுகாப்புக் காவலர்களும் (security guards) அழைக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட் பதிவில்., இந்த சம்பவம் மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளக்கூடாது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், கல்லூரியில் படிக்கும் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Trending News